என் கவிதைகள் - ஆதி கலைஞன்

                                                 

ஜூலை 4, 2022

உடைந்த மதுப்போத்தல்

சாலையின் ஓரத்தில்

காற்றைத் துழாவியது

தரையிறங்கிய வெள்ளைப் பறவையொன்று

கூர்மையில் கழுவேறித் துடித்தது,

இன்னும் இன்னும் என

சிவப்பு நிறம் தீட்டினான்

ஓவியன்

தூரிகை தேய்ந்து துவண்டது,

ஓவியத்தின் பூரணத்தில் திளைத்த

அவன்

கித்தானின் ஓரத்தில் எழுதினான்

தன் பெயரை

'கடவுள்'

என்று.

    - பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை