என் கவிதைகள் - கவிதையொன்று

                                         

ஜூலை 30, 2022

பாசி படர்ந்த குளமொன்றின்

கரையில் அமர்ந்து

தன்னுடைய கவிதையை எழுதினான்

அநாதி கால மீன்களும்

மூதுரைக்கும் ஆமைகளும்

காலங்களில் மிதந்து பழுத்த

இலைகளும்

ஆழம் சுமக்கும் நீர்க்குமிழிகளும்

நிலைத்த வெண் தாமரைகளும்

நூற்றாண்டுகளாக கரையில் மீன் பிடிக்கும்

சில கவிஞர்களும்

அவனருகில் வந்து

கவிதை விசாரித்தார்கள் (தன)

கேட்கக்கூடாத கேள்வியொன்றை

அவர்(வை)களிடம் கேட்டான்

உறைந்த ஒரு புன்னகையை

அளித்துவிட்டு தன்பணியாற்றக் கிளம்பினார்கள் (ன)

மூர்க்கமாய் நிராகரிக்கப்பட்ட

ஆந்தக் கவிதை

விக்ரமாதித்யன் தோளின்

பூதமாய்க் கனத்தது

பழுப்பேறின

நாட்குறிப்பின் தாள்கள்.


    - பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை