என் கவிதைகள் - அன்னை

                                                 


டிசம்பர் 21, 2021

முருங்கை மர

இலையசைவுகள்

மாடுகளின்

ஈக்கள் விரட்டும்

வால் சுழற்றல்கள்

காகங்களின் கரைதல்கள்

மயில்களின் அகவல்கள்

குயில்களின் கூவல்கள்

கருத்த மேகங்களின்

செல்ல மிரட்டல்கள்

முதல் மழைத்தூரலின்

மகா கருணைகள்

காற்றில் மண்சமைக்கும்

வாசனைகள்

ஆறுகளின்

சிலிர்ப்புகள்

வெள்ளி மீன்களின்

மினுமினுப்புகள்

மழை மழை

என

ஆனந்தக் கூத்தாடல்கள்.


    - பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

நெடும்பாதைகள், சிறுகதை - ஆவநாழி இதழ்

அமெரிக்கா, இரு வீடுகள்

கேலரி பியர், சிறுகதை - ஆவநாழி இதழ்