Posts

Showing posts with the label அயல் இலக்கியம்

Cathedral சிறுகதை – ஒரு பார்வையற்ற தேவதூதன்

Image
                                                                      புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் 'Raymond Carver ' எழுதிய 'Cathedral' சிறுகதை , ஒரு வாசகக் குறிப்பு . பார்வையற்ற ஒரு மனிதர் , தன்னுடைய நீண்ட நாள் தோழியைப் பார்க்க அவளுடைய வீட்டுக்கு வருகை தரும் ஒரு இரவில் துவங்குகிறது இந்தச் சிறுகதை , அசாத்தியமான ஒரு இரவு அது . அந்தத் தோழியின் கணவனுடைய கண்ணோட்டத்தில் கதை விவரிக்கப்படுகிறது . அவளுடைய கணவன் சராசரியான ஒரு மனிதன் , எதிலும் நம்பிக்கையற்ற , வாழ்வில் எதையும் உதாசீனமாகக் கடந்துவிடும் , சுயநலப்போக்குள்ள ஒரு மனிதன் . பார்வையற்ற அந்த மனிதரின் வருகையை அவன் ஒருவித சங்கடத்துடனே எதிர்கொள்கிறான் , அவனுடைய மொத்த வாழ்வும் அந்த ஒரு இரவில் மாறப்போவதை அறியாமல் ! தம் மனைவிக்கும் அந்தப் பார்வையற்ற மனிதருக்குமான நீண்ட கால நட்பை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை . அவனுடைய மனைவியும் , ...

The Ones Who Walk Away From Omelas – ஒரு மாய நகரத்தின் கதை

Image
  அமெரிக்க எழுத்தாளர் Ursula K. Le Guin எழுதிய 'The Ones Who Walk Away From Omelas ' சிறுகதை குறித்த என் பார்வை . சிறுகதையின் தொடக்கத்தில் ' ஓமிலாஸ் ' என்ற கற்பனை நகரம் ஒன்றின் பண்புகள் விவரிக்கப்படுகின்றன . ஒரு கோடைக்காலத்தின் துவக்க நாளில் அந்த நகரின் மக்கள் திருவிழாவுக்கான ஆயத்தங்களில் இருக்கிறார்கள் , மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருக்கிறார்கள் . ' ஓமிலாஸ் ' நகரில் மன்னர்கள் , போர் வீரர்கள் , மதத் தலைவர்கள் , அடிமைகள் என யாருமில்லை . ஒருமித்த வாழ்வுண்டு , ஆனால் யாருடைய தலைமையும் இல்லை . நம்பிக்கைகள் உண்டு , ஆனால் மதத்தின் இறுக்கங்களில்லை . பரவசங்கள் உண்டு , ஆனால் போதைப் பொருட்களுக்கான தேவைகள் இல்லை . ஆசிரியர் ' ஓமிலாஸ் ' நகரத்தின் நிலக்காட்சிகளையும் , மக்களின் மனநிலைகளையும் சொல்லிச் சென்று , தோற்று , மீண்டும் வாசகனின் கற்பனைக்கே விட்டுவிடுகிறார் . இங்கு ' தோற்று ' என்கிற பதத்தை ஆசிரியரின் எழுத்து உத்தியாகவும் கருதலாம் . அந்த நகரின் ஒட்டுமொத்த சூழலை விவரிக்கும் அதே வேளையில் , அத...