என் கவிதைகள் - நீ

                                            

ஜூன் 12, 2022

வெளியில் நின்று

நிலைவைப் பார்த்துக்கொண்டிருந்தேன்

 

சாலையில் தோன்றிய ஒருவன்

'நீதானே அது' என்றான்

 

இல்லை என்ற சொல்லை விழுங்கி

வழிகாட்டியாய் கைகள் நீட்டினேன்


நான்கு திசைகள் புசித்து

பசியடங்காமல்

அ திசைகள் நோக்கி நீண்டன

என் கைகள்

 

என் கைகள்

காட்டிய ஒரு திசையில் சென்று 

மறைந்தான்

அவன்

 

நிலவு சலித்து

உள் நுழைய எத்தனித்தேன்

கதவுகள் திறக்கப்படவில்லை

 

சாலையில் இறங்கி

வெளியில் நின்று

நிலைவைப் பார்த்துக்கொண்டிருந்தவனிடம்

கேட்டேன்

'நீதானே அது'.


    - பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை