என் கவிதைகள் - ரணம்

                                                


மார்ச் 26, 2022

நுனி நாக்கை

கடித்துக்கொண்டேன்

 

அறிந்தவர்

சொற்களில்

ஆதூரம் கூடிவிட்டதாக

நெகிழ்ந்தார்


காதலி

கலவியில்

புது உருவெடுப்பதாக

குலவினாள்


மனையாள்

உணவின்

சுவை அறிந்தவனாக

மாறிவிட்டாய்

என்றாள்

 

நண்பன்

பேச்சில்

நஞ்சு மறைந்ததை

வியந்தான்

 

எல்லோரும்

புது மனிதனாக

வலம் வருவதாக

கிசுகிசுத்தார்கள்

 

நானும்

தலையாட்டி

ஆமோதித்தேன்

 

இரகசியமாக

நாக்கின் ரணத்தில்

வடியும்

உதிரத்தை

சுவைத்துக்கொண்டே.


    - பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

மறைந்த நண்பனுக்கு - ஒரு கடிதம்

அமெரிக்கா, இரு வீடுகள்

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்