என் கவிதைகள் - இன்மை
மார்ச் 11, 2023
மனிதம் கூட்டமாய்
தேவாலயங்களுக்குள்
தொழுதுகொண்டிருந்தது
தேவாலயங்கள்
சிலுவைகளை உயர்த்தி
வான் நோக்கிக்
கூவிக்கொண்டிருந்தன
வான் நெடிந்து பரவி
பிரபஞ்சத்திடம்
விடை தேடிக்கொண்டிருந்தது
பிரபஞ்சங்கள் வரிசையாய்
முடிவிலிகளிடம்
தம் கோரிக்கைகளை
அடுக்கிக்கிடந்தன
கடவுள்
இருண்ட கருவறைக்குள்
புழுக்கத்துடன்
புரண்டுகொண்டிருந்தான்.

Comments
Post a Comment