மறைந்த நண்பனுக்கு - ஒரு கடிதம்
அன்புள்ள கார்த்திக், ஆகஸ்ட் 21ம் தேதி 'முடிந்தால் இன்று அழைக்கவும்' என்ற உன் குறுஞ்செய்தியை வழக்கமான ஒன்றாகவே எண்ணியிருந்தேன். நம்மிடையேயான உரையாடலை எப்போதும் நீயே துவக்குவாய். அலுவலக வேலைகளில் மூழ்கியிருந்ததால் பின்னர் அழைக்கிறேன் என்று பதில் எழுதினேன். 'நான் மிகவும் உடல் நலிந்திருக்கிறேன், உடனே அழைக்கவும்' என்ற அசாதாரணமான செய்தியை நான் எதிர்பார்க்கவில்லை. 'தீவிரமான் மஞ்சள் காமாலை' என்ற உன் செய்தி என்னில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அது ஈரல் தொடர்பான ஒன்று என்பதை உணர்ந்து உடனே அழைத்தேன். அதிகம் பேசக்கூட இயலாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாய். இந்த நான்கு மாதங்களில் உன் உடல் மிகுந்த நலிவுற்றது, பனிரண்டு கிலோ எடை இழந்து எலும்புக்கூடாய் காணொலி அழைப்பில் உன்னை பார்த்த அதிர்ச்சி என்னில் இப்போதும் இருக்கிறது. அவ்வப்போது உடல் தேறிவிட்டத...
Comments
Post a Comment