எனது கவிதைகள் - நிறம்

                                                


மார்ச் 5, 2023

முட்டையுடைத்து காற்றை

விழுங்கும்

குட்டிப் பாம்பின் தடங்களில்

அன்னையின்

உயிர்க் கவிச்சி


தண்ணீர் லாரியின்

கொப்பளிப்பை

விழுங்கிப் பெருமூச்சிடும்

பெருநகர வீதிகள்


வரண்ட ஆற்றுக் 

குழிக்காயங்களின்

ஊற்றுநீரைத்

தானுண்ணும் மணல்பரப்புகள்


பக்கவாட்டில் உறங்கும்

குருட்டுப் பிச்சைக்காரன்

கன்னத்தில் வழியும்

வண்ணக் கனவுகளின்

தூரிகைத் தெறிப்புகள்


ஊறி ஊறித் தேங்கும்

உமிழ்நீரின்

எச்சில் நுரைகளில்

கவிஞனின் 

வியர்வைப் புளிப்பு.

     - பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை