என் கவிதைகள் - கடவுள் கைவிடுதல்

                                                

ஏப்ரல் 17, 2022

உறங்கும் குழந்தை

கண்கள் மூடி

சிரித்தது

நாசிகளில் உன்னத வாசம்

காதுகளில் இனிய நாதம்

வானெங்கும் வண்ணப் பலூன்கள்

இளவேனிலில் உறைந்தது காலம்

மானுடம் காமம் மறந்து ஆனந்தித்தது

ஆலயங்களில் தனிமை பூத்தது

தத்துவத்தின் பக்கங்களில் 

வெண்மை படர்ந்தது

கடவுள் ஒரு திருவிழாவில்

கைவிடப்பட்டார்

உறங்கும் குழந்தை

கண்களை மூடியவாறே

சிரித்துச் சிரித்து

உறங்கியது.


    - பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை