Posts

Showing posts from May, 2022

http://kavithaigal.in தளம் - ஒரு கடிதம்

Image
                                                       எழுத்தாளர் ஜி.எஸ்.எஸ்.வி. நவீன் அக்டோபர் 15, 2021 ஒரு செய்தியை வாட்ஸப்பில் பகிர்ந்திருந்தார். கவிதைகளுக்கான பிரத்யேக இணையதளம் ஒன்றை அமைத்திருப்பதாகவும், இது ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி வெளிவரும் என்றும் சொல்லியிருந்தார். அந்தச் செய்தியை ஒட்டி தளத்தின் ஆசிரியர் குழுவுக்கு என் எண்ணங்களைப் பகிர்ந்து ஒரு கடிதம் எழுதினேன். அதன் திருத்தப்பட்ட பிரதி இங்கு பதியப்படுகிறது, கடிதம் எழுதப்பட்ட நாள்: அக்டோபர் 23, 2021. அன்புள்ள ஆசிரியர் குழுவுக்கு ,   வணக்கம் . நான் ஒரு கவிதை வாசகன் , அல்லது அப்படித்தான் அறியப்பட விரும்புகிறேன் . கவிஞர்களில் தேவதேவன் , விக்ரமாதித்யன் , ஆத்மாநாம் , பசுவய்யா , அபி , ஞானக்கூத்தன் , கல்யாண்ஜி , கலாப்பிரியா என்றும் கொஞ்சம் அடுத்த தலைமுறைகளான இசை , போகன் சங்கர் , இளங்கோ கிருஷ்ணன் , மதார் , வேணு வேட்ராயன் என்றும் கலந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன் , ஆனந் த் குமாரும் இந்த வரிசையில் இணைந்துகொள்வார் . இன்னும் வாசிக்கவேண்டிய வரிசைகளில் பிரமிள் முதலிடத்தில் இருக்கிறார் , வரிசை பெரியதுதான் . இங்க

கவிதைகள் உரை - ஒரு நினைவுக் குறிப்பு

Image
                                                            எழுத்தாளர் ஜெயமோகனின் அமெரிக்க வருகையை ஒட்டி Boone, North Carolina நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காவிய முகாமில் கலந்துகொண்டேன். சிறுகதை, நாவல், தத்துவம், இசை, தமிழ் மற்றும் ஆங்கிலக் கவிதைகள் என்று பல தலைப்புகளில் விவாதங்கள் நடந்தேறின. தமிழ்க் கவிதைகள் விவாதத்தில் ஒரு தலைப்பில் உரையாடும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டது. கவிதைகளைப் பரவலாக வாசிப்பது, நண்பர்களிடம் வாசித்த கவிதைகள் குறித்துப் பேசுவது என்றிருந்தாலும், பலர் கூடும் ஒரு நிகழ்வில் இலக்கிய வடிவங்கள் குறித்து உரையாடி எனக்கு பழக்கமில்லை என்பதால் மிகுந்த தயக்கத்துடன் வாய்ப்பை ஏற்றுக்கொண்டேன். ஜெயமோகன் போன்ற ஒரு பேராளுமையின் முன் இலக்கிய வடிவங்களில் நுட்பமான ஒன்றாகக் கருதப்படும் கவிதைகள் குறித்துப் பேசுவது என் தயக்கத்தை மேலும் கூட்டியது. தமிழ்க் கவிதைகளில் உரைக்கான தலைப்பைத் தேர்ந்தெடுப்பதில் சில வாரங்களைத் தொலைத்திருந்தேன். கவிதைகள் குறித்த என்னுடைய அறிதல்கள் பரவலாகக் கவிதைகளை வாசிப்பதனூடாகவும், கவிதைகள் குறித்து இலக்கிய ஆளுமைகள் எழுதும் கட்டுரைகள் மூலமும், சில கவிஞர்களிட

சியமந்தகம் தளம் - ஒரு கடிதம்

Image
                                                  எழுத்தாளர் ஜெயமோகன் 60 வயதை எட்டியதைச் சிறப்பிக்க,  https://jeyamohan60.blogspot.com/ தளம் தொடங்கப்பட்டு, அவரைப் பற்றியும், அவருடைய படைப்புலகம் குறித்தும் எழுத்தாளர்கள், நண்பர்கள் தங்கள் பார்வையை விரிகாகப் பதிவு செய்கிறார்கள். இந்தத் தளம் குறித்த என் எண்ணங்களை அவருக்கு ஒரு கடிதமாக எழுதினேன், அவருடைய தளத்தில் வெளிவந்துள்ளது, அதன் பிரதி இங்கே -  https://www.jeyamohan.in/165591/ அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம் விழைகிறேன். சியமந்தகம் தளத்தில் வெளிவரும் பதிவுகளைத் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். தமிழிலக்கியத்தில் இயங்கும் பலதரப்பட்ட ஆளுமைகள் குறித்து, அவர்களுடைய படைப்புலகம் சார்ந்து விரிவாகவும், சலிக்காமலும் எழுதிக்கொண்டிருப்பவர் நீங்கள். ஆனால் வாசகனாக உங்களுடைய படைப்புகள் வழியாகவும், தளம் வழியாகவும் நானறிந்த ஜெ தவிர – ஒரு காதலனாக, நண்பனாக, எழுத்தாளனாக, ஆசிரியனாக உங்களுடைய மற்ற பக்கங்களையும் அறியும் வாய்ப்பை இந்தத் தளம் எனக்கு வழங்குகிறது. நான் உங்கள் வாசகனாக பெருமிதமும், நெகிழ்வும், மிகுந்த உணர்வெழுச்சியும் அடைந்த பல தருணங்கள் தள

ஆனந்த்குமார் கவிதைகள் - என் கட்டுரை

Image
                                                                 http://www.kavithaigal.in/ மே மாத இதழில் கவிஞர் ஆனந்த்குமாரின் 'டிப் டிப் டிப்' கவிதைத் தொகுப்புக்கு நான் எழுதிய மதிப்புரை வெளிவந்துள்ளது. அதன் பிரதியை இங்கு பகிர்கிறேன், கவிஞர் ஆனந்த்குமாரின் ' டிப் டிப் டிப் ' கவிதைத் தொகுப்பை சென்ற ஆண்டு விஷ்ணுபுரம் இலக்கிய விழாவில் வாங்கினேன் , தன்னறம் நூல்வெளி வெளியீடு , எண்ணிக்கையில் 97 கவிதைகள். முதல் கவிதையிலேயே மனதை வசீகரித்துவிட்ட தொகுப்பு ( ' கிச்சிலிக்கான் பூச்சி '), மறுவாசிப்புகளில் நினைவில் அகலாத பல கவிதைகளையும் , வரிகளையும் என்னில் விதைத்திருந்தது. ' விதைத்தல் ' என்ற பதத்தை இங்கு சற்று அழுத்தமாகவே முன் வைக்கிறேன். ஒரு கவிதை நம்மில் ஏற்படுத்தும் விளைவென்ன ? கவிதைகளின் காட்சிகளோ , சில வரிகளோ , படிமங்களோ நம் அன்றாட நிகழ்வுகளில் ஒரு இனிய வன்முறையாக இடைபுகுந்து நம்மைத் திகைக்கச் செய்பவை , ஒரு புன்முறுவலை உதடுகளில் வரைந்துவிடுபவை , பல நேரங்களில் ஆழமான சிந்தனைகளில் நம்மை ஆழ்த்தும் வல்லமை கொண்டவை , ஒரு கவிஞன் நம்மில் விதைக்கும் விதைகளின் நல் விளைவுக