என் கவிதைகள் - நிறை

                                                   


நவம்பர் 13, 2022

குருட்டுப் பிச்சைக்காரன்

நூறுரூபாய்த் தாளை

தானே இட்டுக்கொள்கிறான்

முதல்போனியாக,

ஆழக் கிணற்றுக்குள்

எறியப்பட்ட பொருட்களாய்

சில்லறைக் காசுகளின்

ஆரவாரம்,

காதுகளைப் பொத்திக்கொண்ட 

கடவுள்

மெல்ல விடுவிக்கிறான் கைகளை,

வழிந்துகொண்டிருந்தது

அட்சயப்பாத்திரம்.

    - பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை