என் கவிதைகள் - அந்தகாரம்

                                                     

நவம்பர் 12, 2022

வேனிற்கால புலரி

உறங்கிப் புரளும்

குழந்தையின் அருகாமைத் தலகணையாய்

நெகிழ்ந்தது

குளிர்கால இரவு

வீடற்ற குருட்டுப் பிச்சைக்காரனின்

துப்பட்டியில் ஊடுருவி 

கெக்கலிதது

கவிஞன்

உக்கிரமான மதியவெயிலில்

தகிக்கும் சாளரமற்ற அறையில்

வியர்வையுடன் மதுவருந்துகிறான்

காகமொன்று

காலமற்ற வெளியின்

உச்சிக்கிளையில் அமர்ந்து

அவலமாய்க் கரைந்தது.

    - பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை