Posts

Showing posts from April, 2022

'An Untold Story' - கதையினுள் ஒரு கதை

Image
                                                  நண்பரும், எழுத்தாளருமான ஜெகதீஷ் குமாரின் ஆங்கிலச் சிறுகதை ' An Untold Story', Spillwords Press இணைய இதழில் வெளியாகியுள்ளது. இந்தச் சிறுகதையின் தமிழ் மொழியாக்கத்தை அவருடைய தளத்தில் வாசித்தேன். இதன் ஆங்கில மூலவடிவத்தை சில மாதங்களுக்கு முன்னரே பகிர்ந்திருந்தார், வாசித்தவுடன் கதை மிகவும் கவர்ந்தது. இன்று தமிழ் வடிவத்தை வாசித்தவுடன் சில எண்ணங்கள் மனதில் எழுந்த வண்ணம் இருந்தன. அவற்றைத் தொகுத்துக்கொள்ளும் முயற்சியே இந்தக் கட்டுரை. யாருமே சொல்லியிராத ஒரு கதையைப் படைத்துவிட முயலும் எழுத்தாளனும், யாருமே சொல்லியிராத கதையைத் தேடி அலையும் வாசகனும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்கிறார்கள். இருவரும் இணைந்து கதையைக் கண்டுபிடிக்க முயல்கிறார்கள், முரண்பாடு ஏற்பட்டு சண்டையிட்டுக்கொள்கிறார்கள், கதை கேட்பாரற்றுத் தரையில் கிடக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், 'ஒரு கதையைப் பற்றிய கதை'. ஒரு எழுத்தாளனின் மனதில் கதை என்ற ஒன்று எப்படி 'கருக்கொள்கிறது' என்று எண்ணிப்பார்க்கிறேன். தன் வாழ்வில் என்றோ நடந்து நினைவுகளின் அடியாழங்களில் புதைந்துக

என் கவிதைகள் - வெற்றிடம்

Image
                                                       ஏப்ரல் 22, 2022 ஒரே வரிசையில்தான் நின்றுகொண்டிருந்தோம் செல்லும் பாதை எதிர்திசையில் நீண்டுகிடந்தது நொடியில் வரிசை விலகி வந்த திசை நோக்கித்  திரும்பிவிட்டாய் ஒரு புத்தகத்தின் ஒரே பக்கத்தின் ஒரே பத்தியின் ஒரே வார்த்தையைத்தானே வாசித்துக்கொண்டிருந்தோம், செல்லும் இடத்துக்கு யாரும் அறியாத இரகசிய வழி வைத்திருக்கிறயா அளிக்கத் தவறிய முத்தத்தின் நினைவா கேட்கத் தயங்கிய மன்னிப்பின் நெருடலா உன்னை உருவாக்கிய வேர்கள் நோக்கிய பிரிவாற்றாமையா எது உன்னை நடத்தியது? எதுவாகினும், நீ உருவாக்கிய வெற்றிடம் சாலையில் இன்னும் தனித்தீவாய்த் தவிக்கிறது!     - பாலாஜி ராஜூ

என் கவிதைகள் - இனிய நாள்

Image
                                                            ஏப்ரல் 18, 2022 இனிய நாள் என்று சொல்லால் தாக்கிவிட்டு கடந்துவிட்டாய், வளைந்த முதுகு தூக்கி எடை தாங்கத் தடியூன்றி சுருங்கிய முகம் கொண்டு வரும் உன்னிடம் பதில் தாக்குதல் நடத்த தயாராகிக்கொண்டிருக்கிறேன், இனிய நாள் இனிய நாள் இனிய நாள் என்று சொல்லிப் பயின்றுகொண்டு காத்துக்கொண்டிருக்கிறேன், நீ சென்ற திசைநோக்கி.     - பாலாஜி ராஜூ

என் கவிதைகள் - கடவுள் கைவிடுதல்

Image
                                                            ஏப்ரல் 17, 2022 உறங்கும் குழந்தை கண்கள் மூடி சிரித்தது நாசிகளில் உன்னத வாசம் காதுகளில் இனிய நாதம் வானெங்கும் வண்ணப் பலூன்கள் இளவேனிலில் உறைந்தது காலம் மானுடம் காமம் மறந்து ஆனந்தித்தது ஆலயங்களில் தனிமை பூத்தது தத்துவத்தின் பக்கங்களில்  வெண்மை படர்ந்தது கடவுள் ஒரு திருவிழாவில் கைவிடப்பட்டார் உறங்கும் குழந்தை கண்களை மூடியவாறே சிரித்துச் சிரித்து உறங்கியது.     - பாலாஜி ராஜூ

என் கவிதைகள் - இருத்தல் இயம்பு

Image
                                                                      ஏப்ரல் 16, 2022 மெத்தை பிரிய மனமில்லாமல் எழு கண்ணாடியில்  வீங்கிய முகத்தின் வெள்ளிக் கம்பிகள் பார் இன்றைய நாள்  இனிய நாள் என்று தயக்கத்துடன் முனகு அலைபேசிக் குப்பைகளை மூளையில் குவி அலுவலகப் பாதையில் வாகனத் திரள்  கண்டு திகை சம்பிரதாய  முகமன் வீசி தயக்கமாய்ச் சிரி கணிப்பொறி முன்  அலையும் மனதுக்கு கடிவாளப் பரிசளி மேற்குச் சூரியன் முகத்தில் அறைய சாலையில் மிதந்து  வீடு திரும்பு பரிச்சய முகம் கண்டு கண்கள் தவிர் உடலுக்குப் பயிற்சி கொடு இறுகிய தசை முறுக்கு பாதையில் நடைபயிலும்  வெள்ளைக்காரி  புட்டம் நோக்கு மகவு  கொஞ்சி உப்பிய கண்ணம் கடி தேக்கிய விந்து கண்கள் மூடிப் பீய்ச்சு துள்ளி அடங்கு கலசம்  ஒலிக்க தங்கத் திரவம் ஊற்றி தொண்டை கசக்கக் குடி சோறு தவிர் வயிற்றில் ரசாயன  ஓசை கேள் மூச்சுமுட்டப் பேசு அபத்தம் உணராமல் வீங்கிய அகந்தை தடவு காரணமற்று மகிழ்ந்திரு இரகசியமாய் அழு தனிமையில் ஏகாந்திரு நட்சத்திரம் நோக்கு தாளில் எதையாவது பிதற்று கலை வடிவ  நாமம் சூட்டு தூக்கத் திசை

என் கவிதைகள் - நாளொரு மேனியும்...

Image
                                                                      ஏப்ரல் 14, 2022 கடிகாரக் கூச்சலில் திடுக்கிட்டெழுந்து காக்கைக் குளியலில் துயில் விரட்டி பசிக்காத வயிற்றில் சோறு திணித்து பனிரெண்டு மணி வயிற்றுக்கு சோற்று மூட்டை கட்டி நான்கு சக்கரங்களை விரட்டி சாலையில் உராய்த்து வழக்கமான கட்டத்திடையில் செருகி அணைத்து அடையாள அட்டையை இயந்திர முனகலுக்கு தின்னக்கொடுத்து மின்தூக்கி தவிர்த்து நாற்பத்தாறு படிகள் எண்ணி மூச்சிரைக்க இருக்கையில் நுழைந்து ஐந்து மணிச் சங்கை எதிர்பார்த்து காத்திருக்கத் தொடங்கினேன்.     - பாலாஜி ராஜூ

கவிதை வாசிப்பில் தொடர்ச்சியை அடைதல் - ஒரு கட்டுரை

Image
                                                            ஏப்ரல் 10, 2022 மே மாதம் எழுத்தாளர் ஜெயமோகன் அமெரிக்காவுக்கு பயணமாகிறார். அவரைச் சந்திக்க ஒரு கூடுகையை அமெரிக்க விஷ்ணுபுரம் அமைப்பினர் நார்த் கரொலினா மாகாணத்தில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்தக் கூடுகையில் நிகழவிருக்கும் கவிதை விவாதத்தின் தொடக்க உரைக்காக இந்தக் கட்டுரையைத் தயாரித்திருந்தேன். ஆனால், உரையில் சில மாற்றங்களை அமைப்பாளர்கள் கேட்டதால், சில கவிதைகளை மட்டும் வாசித்து அது குறித்த என் எண்ணங்களைப் பகிரலாம் என்றிருக்கிறேன். இந்தக் கட்டுரை உரைக்குப் பயன்படாமல் போனாலும், இங்கு பதிவேற்றுவதில் எனக்கு மகிழ்ச்சியே. அனைவருக்கும் வணக்கம், இங்கு கூடியிருக்கும் அனைவரும் தேர்ந்த வாசகர்கள் – பல்வேறு இலக்கிய வடிவங்களில் தேர்ச்சியும் , முதிர்ந்த அனுபவமும் பெற்றவர்கள் , பலர் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருப்பவர்கள் அல்லது எழுதப்போகிறவர்கள் . இதில் பலரும் கவிதைகளை என்னை விட ஆழமாகவும் , விரிவாகவும் வாசிப்பவர்களாகவும் இருக்கலாம் . இப்படிப்பட்ட ஒரு குழுவின் முன் கவிதைகள் குறித்து பேசவேண்டும் என்றவுடன் நிறையத் தயக்கங்கள் இருந்தது . இதில் 

மூன்று பயிற்சிக் கவிதைகள்

Image
                                                         நாட்குறிப்புகளின் பக்கங்களில் அலைந்துகொண்டிருந்தபோது இந்தக் கவிதைகளை மீண்டும் வாசித்தேன். சென்ற வருடம் ஒருநாள் இதுவரை எழுதிய கவிதைகளிலிருந்து சொற்ப எண்ணிக்கைகளை மட்டும் தேர்ந்தெடுத்து தனியாக எழுதி வைத்தேன். அந்தப் பட்டியலில் இது போன்ற பல கவிதைகளைத் தவிர்த்தேன், இவற்றை கவிதை எழுதப் பயிழும் ஒருவனுடைய அசட்டு முயற்சிகள் என்று மட்டுமே கொள்ளலாம். கவிதைகளை எழுதிய நாட்களைக் குறித்து வைப்பதும் பயனுள்ளதாகவே தெரிகிறது, பிப்ரவரி 10, 2019 என்றோ உறைந்த பனி இன்று உருகிக்கொண்டிருந்தது, அதன் ஓசையில் ஓர் அருவியின் மென் குரல். டிசம்பர் 28, 2019 இந்த கிருஸ்துமஸ் விளக்குகளிடம் யார் சொல்வது கிருஸ்துமஸ் தினம் முடிந்துவிட்டதென! ஏப்ரல் 1, 2019 பறந்து விரிந்த வானம் அதில் சிறு துளியாய் விமானம் தலைகீழாய்க் கவிழ்த்துவிட்டேன் வானம் கடலாகியது விமானம் மீனாகியது நான்?   - பாலாஜி ராஜூ

என் கவிதைகள் - எடை

Image
                                                       ஏப்ரல் 4, 2022 அதீதமாய் கனக்கிறது கைப்பேசி   காத்திருப்பின்  அடர்த்தியுடன் பதில்கள் கைவிட்டுவிட்ட சம்பிரதாய  செய்திகள் நிராதரவாய் அலைகின்றன. ஆவேசமாய்  அழிக்கிறேன், செய்திகள் மறைந்த சில நொடிகள்… துளிர்த்தது  ஒரு இரவு வணக்கம்,   உறங்கச் சென்றேன் மீண்டும் கனக்கும் கைப்பேசியுடன்.  - பாலாஜி ராஜூ