என் கவிதைகள் - பிராணி

                                          
நவம்பர் 18, 2023

அது என்னிடம் 

எப்படி வந்தது

என்று தெரியவில்லை

நான் ஒரு டைனோசரை

வளர்த்துக்கொண்டிருந்தேன்

அது என்னை விழுங்கி

வளர்ந்துகொண்டிருந்தது

சலனமற்ற இரவில்

அலறும் பெயரற்ற

காட்டு விலங்கைப் போல

எதிர்பாராத வேளைகளில்

என் கட்டுகளை மீறி

உறுமித் திமிறும்

ஒரு நாள்

பூங்காவில் விளையாடும்

குழந்தையிடமிருந்து வெளியேறிய

குட்டி டைனோசரைக் கண்ட

அந்த தருணம்

புரிந்துவிட்டது 

எனக்கு எல்லாமும்.

    - பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை