Posts

Showing posts from January, 2023

சிவமயம் சிறுகதை, ஜெயமோகன் - ஒரு பார்வை

Image
                                            ' சிவமயம் ' எழுத்தாளர் ஜெயமோகனின் தொடக்ககாலச் சிறுகதைகளில் ஒன்று, 1992ல் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. நண்பர்களுடனான மாதாந்திர இலக்கியக் கூடுகையில் சிறுகதையொன்றை விவாதிக்க முடிவு செய்தோம். அதற்கு நண்பர் ஜெகதீஷ் குமார் இந்தக் கதையைப் பரிந்துரைத்தார். சிறுகதையை வாசித்துவிட்டு அதன் மீதான என் எண்ணங்களைத் தொகுத்துக்கொள்ள இந்தப் பதிவை எழுதுகிறேன். சுகவனேஸ்வரர் என்றழைக்கப்படும் சிவனின் ஒரு வடிவம் குடிகொண்டிருக்கும் கோவிலொன்றில் நிகழும் கதையை ஒற்றி ஆசிரியர் சிறுகதையை அமைத்திருக்கிறார். இந்தக் கோவில் சேலத்தில் இருப்பதாகவும், கோவிலை ஒட்டிய தொன்மக் கதையொன்றையும் இணையத் தகவல்கள் அறிவிக்கின்றன.  கதையில் சுகவனேஸ்வரர் குடிகொண்டிருக்கும் லிங்க வடிவச் சிவன் உள்ள கோவில் அதிகக் கவனிப்பற்று இருக்கிறது. சிவனுக்கான பூஜைகள் செய்யும் சம்பு குருக்கள், அங்கு வந்து தங்கி கோவிலைப் பிரசித்தி பெறவைத்த  'சிவா' என்ற பெயரைத் தவிர எதையும் உச்சரிக்காத கிளிச்சாமி, கருணாகரன் எனும் வாட்ச்மேன் ஆகிய கதைமாந்தரைத் தவிர 'சரசா' எனும் தாசிப் பெண்ணின் பெயரும் வருகிறத

அகழ் இதழ், மதார் கவிதைகள்

Image
                                                              அகழ் இணைய இதழில் கவிஞர் மதார் எழுதிய ஐந்து கவிதைகள் வெளிவந்துள்ளன. கவிதைகளை வாசித்துவிட்டு அவருக்கு எழுதிய குறிப்பு இது. அன்புள்ள மதார் , ஒரு இடைவெளிக்குப் பிறகு உங்கள் கவிதைகளை வாசிக்கிறேன் , நாம் பேசியும் சில மாதங்களாகிவிட்டன . கடந்த சில மாதங்களாகவே அதிக ம் கவிதைகளை வாசிக்கவில்லை , வேலைப் பளு , மனநிலை என சில காரணங்கள். கவிதை எழுத மட்டுமல்ல , வாசிக்கவும் ஒரு குறிப்பிட்ட மனநிலை தேவைப்படுகிறதல்லவா ? இசை , தேவதேவன் , ஃபிரான்சிஸ் கிருபா என வாசித்த கவிதைகளும் மனதில் ஒட்டவில்லை . உங்கள் கவிதைகளைக் கண்டவுடன் மனதில் ஒரு நேர்நிலையான எதிர்பார்ப்பு தொற்றிக்கொள்கிறது. எப்போதும் போல கலவையான உணர்வுநிலைகளைக் கொண்ட கவிதைகள், மிக நல்ல கோர்வை. எந்தக் கவிதையை வாசித்தாலும் அதில் நான் தவறவிட்டுவிட்ட பார்வைகளைக் குறித்து ஒரு சிறு சலனம் இருந்துகொண்டே இருக்கிறது. அது உங்களுடைய இந்த ஐந்து கவிதைகளுக்கும் பொருந்தும். மனமார்ந்த வாழ்த்துகள் மதார். கவிதைகளை வாசித்தவுடன் எழுதவேண்டும் என்று தொடங்கிவிட்டேன், இடையில் பல வேலைகள். நவின் இந்த மாத இதழுக்

கலாப்ரியா கவிதைகள், கவிதைகள் இதழ்

Image
                                                         ஜனவரி மாத கவிதைகள் தளத்தில் கவிஞர் கலாப்ரியாவின் கதைகள் குறித்த எனது கட்டுரை வெளிவந்துள்ளது. அதன் பிரதி இங்கு, கலாப்ரியாவின் கவியுலகு – கவிஞர் கலாப்ரியா தன்னுடைய கவிதைகளுக்கான கச்சாப் பொருட்களை தன்னைச் சுற்றி வாழும் அன்றாட மனிதர்களின் எளிய வாழ்விலிருந்தே பெற்றுக்கொள்கிறார் . புறச்சூழலையும் அதன் இயக்கங்களையும் கூரிய நிலையில் காட்சிப்படுத்தி வாசகனிடம் அளிக்கிறார் . அகவயமான உணர்வு வெளிப்பாடுகளால் நிறைந்த , வாசகனிடம் பூடக மொழியில் உரையாடும் பெரும்பாலான நவீனக் கவிதைகளிலிருந்தும் , கவிஞர்களிடமிருந்தும் அவருடைய கவிதைகளும் , கவியாளுமையும் தனித்து நிலைகொள்கின்றன . ஒரு குறிப்பிட்ட மண்ணின் , மனிதர்களின் இயல்புகளைப் பேசினாலும் , கவிதைகள் மட்டுமே தன்னுடைய இயல்புகளால் வாசகனில் தீண்டும் பிரத்யேகமான புள்ளிகள் அவருடைய கவிதைகளில் தொடர்ச்சியாக வெளிப்படுகின்றன . மனிதர்கள் – இந்தக் கவிதை வாழ்வின் இரண்டு ஆதாரமான உண்மைகளைத் தொடுகிறது . ஒன்று துயரங்களிலிருந்து மீண்டெழுந்து வாழ்வைத் தொடர எத்தனிக்கும் ஒரு பெண்ணின் பிம்பம் , அது உலகளாவியது . இரண்ட

ஃப்ளமிங்கோ சிறுகதை, காளிப்ரஸாத் - வனம் இதழ்

Image
                                                                   எழுத்தாளர் காளிப்ரஸாத் வனம் இணைய இதழில் ஃப்ளமிங்கோ என்ற சிறுகதையை எழுதியிருக்கிறார். அவருடைய சில சிறுகதைகளை இணைய இதழ்களில் வாசித்திருக்கிறேன். தனக்கே உரிய ஒரு சொல்லல் முறையைக் கொண்டிருக்கிறார். ஒரு எழுத்தாளனின் சில கதைகளை வாசித்திருந்தாலும் வாசகனாக மனம் ஒரு பரிச்சய உணர்வை அடைகிறது, அவனுடைய அடுத்த படைப்புகளை வாசிக்கத் தூண்டுகிறது. இந்தத் தூண்டலே ஃப்ளமிங்கோ சிறுகதையை வாசிக்க வைத்தது. மெல்லிய பகடி கலந்த நடையில் எளிய சினிமாப் பாடல்களுக்குக் கூட உணர்ச்சிவசப்படும் கதாப்பாதிரம் ஒன்றின் பார்வையில் சிறுகதை விரிகிறது. ஃப்ளமிங்கோ பறவை பொதுவாக ஒரே ஒரு முட்டையை மட்டுமே ஈளும் வழக்கமுடையது. இந்தப் பறவையை காளிப்ரஸாத் ஒரு படிமமாகப் பயன்படுத்தியிருக்கிறார். சிறுகதையில் மிக அழுத்தமான சூழலிலும் நேர்மறையாக இயல்பாக வெளிப்படும் பெண்கள் சிலர் வருகிறார்கள், அவர்களைச் சுற்றி சிறுகதைக்கான களத்தை விரித்திருக்கிறார் எழுத்தாளர். பெற்றோர் எய்ட்ஸ் நோயாளிகள் என்று தெரிந்தும் பாபி மகிழ்வானவளாக, ஃப்ளமிங்கோ பறவையின் முட்டை ஒன்றைப் பேணுகிறாள். தன் வீட்டின

மேற்கத்திய இசை: எளிய அறிமுகம் கட்டுரை - சொல்வனம்

Image
                                                              நண்பர் விவேக் சுப்ரமணியன் ' மேற்கத்திய இசை: எளிய அறிமுகம் ' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார், சொல்வனம் இணைய இதழில் வெளிவந்துள்ளது. இசை குறித்து தொடர்ந்து பேசும் எழுதும் கலைஞர்களை வாசித்தாலும் பாரம்பரிய இசை, மேற்கத்திய இசை ஆகியவற்றை ஆழ்ந்து கேட்பதற்கு மனக்குவிப்பு அமைந்ததில்லை, அதன் அடிப்படைகளிலும் பரிச்சயமில்லை. இசை என்றாலே சினிமா இசை என்று நம்பிய தலைமுறையைச் சார்ந்தவன். நாஞ்சில் நாடனின் எழுத்தை வாசித்துவிட்டு பிஸ்மில்லா கானின் ஷெனாய் இசையைக் கேட்க முயன்றேன், அதிகபட்சம் பத்துநிமிடங்கள் கேட்கமுடிகிறது, மூச்சுமுட்டி இளையராஜாவுக்கு வந்து நிற்பேன் - இன்னும் வெளிப்படையாகச் சொன்னால் 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' தான் ஆசுவாசம் அளிக்கிறது. மேற்கத்திய இசையைப் பலமுறை கேட்க முயன்றிருக்கிறேன். மனதை எழுத்துக்கும் இசைக்குமாக அசைத்துக்கொண்டிருப்பதை இன்னும் வழக்கமாக வைத்திருக்கிறேன் என்றாலும், அதிகபட்சம் பத்திலிருந்து முப்பது நிமிடங்கள் பாரம்பரிய மேற்கத்திய இசை கேட்க முடிகிறது, பின் இளையராஜாவிடம் சரணடைதலே நிகழும். விவேக் க

வர்ணகலா, சிறுகதை - ஷோபாசக்தி, வல்லினம்

Image
                                                              எழுத்தாளர் ஷோபாசக்தி தமிழில் குறிப்பிடத்தக்க சிறுகதை எழுத்தாளர் என்று அறியப்படுகிறார். சாரு நிவேதிதா, ஜெயமோகன் இருவரும் அவரை தமிழ்ச் சிறுகதைகளில் உச்ச சாத்தியங்களை நிகழ்த்திய கலைஞர் என்றே எண்ணுகிறார்கள். அவருடைய சிறுகதைகள் சிலவற்றை இணையத்தில் வாசித்திருக்கிறேன், நாவல்களையோ மற்ற தொகுப்புகளையோ தொடர்ச்சியாக வாசித்ததில்லை. ஜனவரி மாத வல்லினம் இணைய இதழில் அவருடைய வர்ணகலா என்ற சிறுகதை வெளியாகியுள்ளது. இலங்கையின் அரசியல் சூழலால் புலம்பெயர்ந்து வாழும் தமிழினம் இன்று இரு பத்துவருடங்களைக் கடந்திருக்கிறார்கள். தாம் அடைந்த அயல் இடங்களில் ஆழமாக வேறூன்றியுமிருக்கிறார்கள். கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, பிரிட்டன் என்று படர்ந்து வாழ்கிறார்கள். தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவனாக, இலங்கைத் தமிழர்கள் குறித்து ஒற்றைப்படையான பிம்பங்களையே இதுவரை அடைந்திருக்கிறேன். அதைப் பொதுவாக ஒருவகை கரிசன நோக்கு என்று கருதலாம், அல்லது அதீதப் புனிதப்படுத்துதல். புலம்பெயர் தமிழர்களின், குறிப்பாக இலங்கைத் தமிழர்களின் வாழ்வியலையும், தேடல்களையும், மன அமைப்பு

செல்க 2022, வருக 2023

Image
                                                                   இன்னொரு புதிய வருடத்தில் நுழைகிறேன். பிரக்ஞையில் 2023 எனும் எண்ணின் ஆதிக்கம் தொடங்கியிருக்கும் இந்த வேளையில், 2022ம் வருடத்தையும் திரும்பிப்ப் பார்க்க விரும்புகிறேன். 2022 இதுவரை நான் கடந்து வந்த வருடங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. வாசிப்பு எனும் அடித்தளத்திலிருந்து எம்பி எழுத்து எனும் படிநிலையை எட்டிய ஆண்டு. இந்தியா சென்று திரும்பியதும் பிப்ரவரி மாதம் வலைத்தளம் துவங்கி ஆண்டிறுதிக்குள் நூறு பதிவுகளுக்குமேல் எழுதியிருக்கிறேன், நிறைவாகவே உணர்கிறேன். சிந்தனைகளைக் கோர்த்துக்கொண்டு அதை எழுத்தாக மாற்றுவது ஒரு உன்னத நிலை. ஒவ்வொரு பதிவு எழுதியதும் மனது கொள்ளும் எழுச்சி நான் இதுவரை உணராமலிருந்த ஒரு நிலை, அனுபவம். எழுத்து என் சிந்தனைகளின் அடிப்படைகளில் ஆழமான பாதிப்பைச் செலுத்தியிருக்கிறது என்றே எண்ணுகிறேன். சுற்றி நிகழும் சம்பவங்களையும் அதை நம் அகம் எதிர்கொள்ளும் விதங்களையும் தவறவிட்டுக்கொண்டிருந்தவன், கூர்ந்து அவதானிக்கத் தொடங்கியிருக்கிறேன். மனது எதிர்கொள்வதை வார்த்தைகளாக உருமாற்றத் தொடங்குவதைத் தொடர்ந்து உணர்கிறேன். என்னள