Posts

Showing posts from 2025

முற்று - கவிதை

Image
                                                       செப்டம்பர் 12, 2025 நாங்கள் காத்திருந்தோம் ஒரு பெரிய கட்டிடத்தினுள், சிலர் சிலருக்காக சிலர் சிலதுக்காக சிலர் எதற்காகவோ எங்கள் எல்லோருக்கும் இருந்தன காரணங்கள், கட்டிடம் காத்திருந்தது அதனுள் கடிகாரம் காத்திருந்தது சாளரங்கள் காத்திருந்தன மேஜைகள் நாற்காலிகள் தேநீர் கோப்பைகள் மதுக் குவளைகள் எல்லாமும், எங்களுடைய காத்திருப்புத் தருணங்கள் கூடின, அவை ஊரின் காத்திருப்பாயின பிறகு  நகரத்தின் தேசத்தின் கண்டங்களின் பூமியின் காத்திருப்பாகியது, பிரபஞ்சமும் காத்திருந்தது, நான் என் காத்திருப்பு முடிவுற்று நீங்குகிறேன் கட்டிடத்தை விட்டு.     - பாலாஜி ராஜூ

பிரார்த்தனை - கவிதை

Image
                                                       செப்டம்பர் 7, 2025 பரபரப்பான சாலையில் உக்கிரமான சிவப்பு விளக்கு, வீடிலியின் பதாகையில் கலைந்த சொற்கள், அனிச்சையாய் கைகளில் தென்பட்ட இருபது பணம் சில ஒற்றைகளாய் இல்லாமலிருப்பதன் கனம், வாகனக் கண்ணாடி கீழிறங்கி வெளிவருகிறது புனிதக் கை பலநூறு கைகளின் பிரதிநிதியாய், பெற்றுக்கொண்டவன் உச்சரித்த அந்த வார்த்தை ஒலிக்கிறது சாலையெங்கும் ஒரு கூட்டுப் பிரார்த்தனையின் உச்ச வரியாய்.     - பாலாஜி ராஜூ

பத்திரம் - கவிதை

Image
                                                  ஜூன், 2025 மொழியைக் கற்றேன், நுணுங்கிய அர்த்தமற்ற வார்த்தைகள் என் முன் முடிவற்ற வரிகளாய், வாசிக்க முயல்கிறேன் புரியவில்லை, விரோதம் பாராட்டுகிறான் கையெழுத்திட மறுத்த என்னிடம் பத்திரக்காரன், மறுகேள்வியில்லாமல் கையெழுத்திடு என்றான் மகிழ்வாய் உலவிய ஹிப்பி, கவிஞன் சொன்னான் கைநாட்டுகிறேன்  என.     - பாலாஜி ராஜூ

மறக்கப்படுபவை - கவிதை

Image
                                                       மார்ச் 20, 2025 புதிய காலணிகள் கண்டேன் என் பாதங்களை நினைவுறுத்தியது பொருதி ஒத்திகை பார்த்தேன் எனதானது அணிந்தேன் என்னில் ஒன்றானது பிறகு மறந்தேன் என் பழைய  பாதங்களை புதிய காலணிகளை.     - பாலாஜி ராஜூ

அடுக்குகள் - கவிதை

Image
                                                  ஜூன், 2025 இரவுக்குள் பூமி பூமியின் மேல் வீடு வீட்டினுள் கட்டில் கட்டிலில் நான் என் மேல் போர்வை அதன் மேல் கூரை கூரையின் மேல் ஆகாயம் ஆகாயத்துக்கு அப்பால் நிறமழிந்த கருமை, இங்கு வியர்வை பூத்த போர்வையினுள் என் கனவுகளின் ஓயாக் கூச்சல்.     - பாலாஜி ராஜூ

நானும் அவனும் - கவிதை

Image
                                                       மே, 2025 மழை பெய்கிறது, வாகனத்தை நிறுத்தி காத்திருக்கிறேன் நனையாமல் வீட்டினுள் நுழைய, துப்பாக்கி வெடிக்கிறது கெண்டைக்கால் சிலிர்த்து ஆயத்தமாகிறான் பந்தய வீரன் காற்றைக் கீறி கோட்டைக் கடக்க, ஓடினோம் வாகனத்தை அணைக்க அழுத்திய சாவியுடன் நானும் துப்பாக்கி வெடியொலி எதிரொலிப்பை உணர்ந்த அவனும்... கதவு திறந்தது கோடு மறைந்தது இளைப்பாறுகிறோம், வீட்டின் நிசப்தத்தில் அவனும் மைதானக் கூக்குரல்களூடே நானும்.     - பாலாஜி ராஜூ

புதிய நகரம் - கவிதை

Image
                                                       ஜூலை 15, 2025 நான் ஒரு அழகிய நகரில் வாழ்கிறேன் இங்கு மரங்கள் நெருப்பை அணிகின்றன ஆறு கடல் குளங்களில் குருதி ஓடுகிறது அணுக்கமானவர்களை கட்டி அணைக்கையில் கத்தியால் மெல்ல கீறுகிறார்கள் குழந்தைகள்  தன்னைவிடப் பெரிய நிஜத் துப்பாக்கிகளைக் கொண்டு வானில் சுட்டுப் பயில்கிறார்கள் அன்பு கருணை கண்ணீர் போன்ற வார்த்தைகள் உச்சரிப்புத் தடைகொண்டன எல்லோரும் சங்கேத வார்த்தைகளில் பாடினார்கள் இறப்பு வீடுகளில் மனிதர்கள் பால் கருதாமல் புணர்ந்தார்கள் நான் ஒரு கவிஞனின் இறுதிச் சடங்கிற்கு சென்றேன் இனிய கவிதைகள் மட்டும் எழுதியவன் கழுவிலேற்றப்பட்டவன் எதிலிருந்தோ விடுபட்ட சாயலுடன் உறைந்த அவன் முகத்தைப் பார்த்து சில கவிதை வரிகளை முணுமுணுத்துவிட்டு... பின் என்னுடன் இணைய அழைத்த பெயர் தெரியாத மிருகம் ஒன்றுடன் இருளில் ஒதுங்கினேன்.      - பாலாஜி ராஜூ

பரிணாமம் - கவிதை

Image
                                                       ஆகஸ்ட் 30, 2025 மெல்ல மெல்ல புல் வளர்கிறது மெல்ல மெல்ல புதர் சிரிக்கிறது மெல்ல மெல்லத்தான் எல்லாமும் நிகழ்கின்றன ஒரு பூ துப்பாக்கி  அணு மெல்ல மெல்லத்தான் எல்லாமும் நான் புன்னகைக்கிறேன் அண்டை வீட்டுக்காரனின் கண்கள் தேடி மெல்ல மெல்ல.     - பாலாஜி ராஜூ

அமெரிக்கா, இரு வீடுகள்

Image
                                                                      நான் கொலம்பஸின் புறநகரமான டப்ளின் நகருக்கு (Dublin, Ohio) குடிபெயர்ந்தது 2021ம் ஆண்டு ஜூன் மாதம். 2014 ம் ஆண்டிலிருந்து வசித்த டொலிடோவை (Toledo, Ohio) ஒட்டிய பெரிஸ்பெர்க் நகரிலிருந்து (Perrysburg, Ohio) தெற்காக 120 மைல்கள் தொலைவில் அமைந்த நகரம் டப்ளின். டப்ளின் நகரில் நான்கு வருடங்களுக்கு மேலாக வசிக்கும் இந்த குடியிருப்புக்கு வந்து வீடுகளையும் நகரையும் சுற்றிப் பார்த்துவிட்டு சென்ற நாட்கள் இன்னும் நினைவில் இருக்கிறது.  அமெரிக்கா முழுக்கவே பசுமையால் ஆனது என்ற எண்ணம் இருந்தாலும் இந்த நகரின் பசுமையும் குடியிருப்பை ஒட்டி உருவாக்கப்பட்ட நீண்ட ஓடையும் உடன் மனதைக் கவர்ந்துவிட்டது. என்னுடைய புதிய அலுவலகத்தை ஒட்டிய சற்று வாகன அடர்த்தியும் கடைகளின் அருகாமையும் மக்கள் நெருக்கமும் அமைந்த நகரில் இருக்க வாய்ப்பிருந்தும் ...

ரம்யா மனோகரன் கவிதைகள் - ஒரு கடிதம்

Image
                                                            ரம்யா மனோகரன்: கவிதைகள் ரம்யா நலமா? முதலில் மன்னிப்பு கோருகிறேன். என்னிடம் வரும் படைப்புகளை முடிந்தளவு விரைவாக வாசித்து எண்ணங்களைப் பகிர்ந்துகொள்பவனாகவே இருந்திருக்கிறேன். உங்களுடைய கவிதைகளை வாசிக்க இவ்வளவு நாட்கள் எடுத்துக்கொண்டது முதல் முறை, எனக்கே சற்று உறுத்துகிறது. முன்னரே குறிப்பிட்டது போல சில பயணங்கள், அலைச்சல்கள். அப்புறம் எப்போதும் போல மனம் கவிதைகளை விட்டு முற்றாக விலகியிருந்த நாட்கள். எவ்வளவு விலகி இருக்கிறேனோ அதே அளவு வாஞ்சையோடு மீண்டும் ஈடுபடுபவனாகவும் இருக்கிறேன். என்னுடைய மனநிலை அப்படி, வேறொன்றும் பிரத்யேக காரணங்கள் இல்லை. சரி, சுய பிலாக்கணம் போதும் உங்கள் கவிதைகளுக்கு வருவோம். எண்ணிக்கையில் நான் நிறைய கவிதைகளை எதிர்பார்த்தேன், பதிநான்கு கவிதைகள் மட்டும் சுட்டியில் இருந்தன. மிகுந்த பிரக்ஞையோடு தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறீர்கள் என்று ...

நீல வாகா, சிறுகதை - சொல்வனம் கலந்துரையாடல்

Image
நண்பர் மதன் எழுதிய நீல வாகா சிறுகதை குறித்து சொல்வனம் இதழில் நிகழ்ந்த இணைய கலந்துரையாடலின் இணைப்பு இது. ஒரு மணிநேரம் வரை உரையாடல் சென்றது. மதன் கேள்விகளுக்கு மிக விரிவான பதில்களை அளித்தார். இது இணையத்தில் காணொளி வாயிலாக நான் பேசும் மூன்றாவது உரை.

உறம்பரையான், சிறுகதை - ஒலிவடிவம்

Image
  அந்திமழை சிறுகதைப் போட்டியில் மூன்றாவதாகத் தேர்வுசெய்யப்பட்ட எனது சிறுகதை 'உறம்பரையான்' ஒலிவடிவில் பதிவேற்றம் கண்டுள்ளது. அதன் இணைப்பு இங்கு.

உறம்பரையான், சிறுகதை

Image
                                                    அந்திமழை இதழ் சுட்டி                                         நா ங்கள் முத்துசாமி தாத்தாவின் வீட்டு வாசலில் கதை கேட்க ஆயத்தமானோம் . நாங்கள் என்றால் நான் , சக்திவேல் , ராஜா அப்புறம் உறம்பரையான் சுப்பிரமணி . உறம்பரையான் என்றால் அசலூர்காரன் அல்லது விருந்தாளி . எங்கள் ஊருக்கு கிழக்கே இரண்டு மைல்கள் தூரத்தில் இருக்கும் குளத்துப்பாளையத்தை சார்ந்த சுப்பிரமணி , கொட்டமுத்து என்று அழைக்கப்படும் நல்லதம்பி மாமாவுக்கு சொந்தம் . சுப்பிரமணி அவ்வப்போது நல்லதம்பி மாமா வீட்டில் இருப்பான் . ஊருக்கு வருகையில் எங்களோடு , குறிப்பாக என்னோடு சேர்ந்து விளையாடவும் கதை கேட்கவும் இணைந்துகொள்வான் . முத்துசாமி தாத்தாவுடையது பழைய ஓட்டுவீடு . அதில் இரண்டு அறைகளும் நீண்ட...