Posts

Showing posts from 2025

2025 ம் ஆண்டு - பத்து சிறுகதைகளும், ஐம்பது விக்கெட்டுகளும்

Image
                                                                 2025ம் ஆண்டு உத்வேகத்துடன் தொடங்கியது. கரூர் சென்று திரும்பிய டிசம்பர் 2024, ஒருநாள் விடிகாலையில் 'ஐஸ்கிரீம்' சிறுகதைக்கான கரு மனதில் உதித்தது. ' ஐஸ்கிரீம் ' என்பதை ஒரு உருவகமாக வைத்து ஐம்பது வயதுப் பெண்ணின், உடல் மற்றும் மன அவசங்களைச் சொல்ல முனைந்த கதை. அதை என்னுடைய ஊரின் அண்டை வீட்டுப் பெண் ஒருவரின் பிம்பத்தை மையமாக வைத்து எழுதினேன். கொங்கு வட்டார வழக்கில் எழுதி 'சொல்வனம்' இதழுக்கு அனுப்பினேன், எந்த எதிர்வினையும் இல்லாமல் அவர்கள் பிரசுரித்தார்கள்.  ஜனவரி மாதமே ' இருபது ரூபாய் ' சிறுகதையை எழுதினேன். அதையும் ஊரில் வசிக்கும், பாலிடெக்னிக் முடித்துவிட்டு பைனான்ஸ் கம்பெனிக்கு வேலைக்கு செல்லும் பள்ளி நண்பன் ஒருவனை மனதில் வைத்து எழுதினேன். அந்தக் கதையும் 'சொல்வனம்' இதழில் பிப்ரவரி மாதம் வெளிவந்தது. அதே மாதம், ' உறம்பரையான் ' சிறுகத...

2025, வாசித்த புத்தகங்கள்

Image
                                                         சென்ற வருடத்தை ஒப்பிட்டால், இந்த வருடம் வாசித்த புத்தகங்களின் எண்ணிக்கை பாதி அளவுதான். பதினைந்து புத்தகங்கள் வாசித்திருக்கிறேன். எழுத்து, கிரிக்கெட் என நேரத்தைச் செலவிட்டுவிட்டேன், நாவல் The Old Men and the Sea - Ernest Hemingway சோளகர் தொட்டி - ச. பாலமுருகன் சொல்வளர்காடு - ஜெயமோகன் காவியம் - ஜெயமோகன் கன்யாகுமரி - ஜெயமோகன் காடு - ஜெயமோகன் குறுநாவல் நீலநிழல் - ஜெயமோகன் அசுரகணம் - கா.நா.சு. சிறுகதை தொகுப்பு உடனிருப்பவன் - சுரேஷ் பிரதீப் மர்ம காரியம் - போகன் சங்கர் கட்டுரைகள் ஒளிரும் பாதை - ஜெயமோகன் கவிதை தொகுப்பு மாயப்பாறை - மதார் ப்ளம் கேக் - ஆனந்த் குமார் அல்பேனியக் கவிதைகள், இஸ்மாயில் காதரேயின் - மொழிபெயர்ப்பு ரிஷான் ஷெரிப் ஓர் இதயம் ஓர் உடல் ஓர் இரகசியம், இசிரு சாமர சோமவீர - மொழிபெயர்ப்பு ரிஷான் ஷெரிப்

வானப்ரஸ்தம், சிறுகதை - சொல்வனம் உரை

Image
                                     நண்பர் ஜெகதீஷ் குமார் எழுதிய வானப்ரஸ்தம் சிறுகதை, திணமணி தீபாவளி மலரில் வெளியாகியிருந்தது. அது குறித்த உரையாடலை சொல்வனம் இதழ் ஒருங்கிணைத்தது. அதன் காணொளிப் பதிவை இங்கு இணைக்கிறேன். இது ஜெகதீஷ் குமாருடைய வலைத்தளத்தில் இருக்கும் 'வானப்ரஸ்தம்' சிறுகதைக்கான இணைப்பு, ஜெகதீஷ் குமார்: வானப்ரஸ்தம் - சிறுகதை

எழுகை, சிறுகதை - சொல்வனம் இதழ்

Image
                                                            “ உனக்கு அதிசயங்களில் நம்பிக்கை இருக்கிறதா ?” என்ற கேள்வியை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை . ஏதோ வினோத உலகிலிருந்து நேரடியாக இங்கு வந்து விழுந்தவரைப் போல அந்த மனிதர் இருந்தார் . அவரிடமிருந்து சம்பிரதாயமான கேள்விகள் ஏதேனும் எழுந்திருந்தாலும் எனக்கு அது விசிதிரமாகவே தோன்றியிருக்கும் ! எனக்கு மிகவும் பரிச்சயமான நகர் , ஆனாலும் இந்தப் பகுதிக்கு அதுவரை வந்ததில்லை . வீடுகளுக்கு இடையில் நெடுந்தொலைவும் , ஓங்கி உயர்ந்த மரங்களும் , வயல்வெளிகளும் , மண்டிய புதர்களுமாக கிராமத்துச் சாலையின் ஒதுக்குப்பு ற மான பகுதியில் அவருடைய வீடு இன்னும் தனிமைப்பட்டுக் கிடந்தது . வீட்டு முகப்பில் இருந்த விளக்குக் குமிழுக்குள் கசடுகள் நிறைந்து , அதிலிருந்து வெளிச்சம் பலகீனமாகக் கசிந்தது . அங்கு ஆண்டுகளாக யாரும் குடியிருக்க...