Posts

Showing posts from May, 2023

கரூர் டைரீஸ், ஒரு நீண்டநாள் உறவு - 6

Image
                                                            நகுல்சாமி அண்ணனை இருபது வருடங்கள் கழித்து சந்தித்தேன். திருச்சி கரூர் நெடுஞ்சாலையில் புலியூர் அருகில் துவங்கப்பட்ட புதிய பெட்ரோல் நிலையத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கினேன். நைனா கைகளை காட்டி "உன்ன எப்பவுமே கேப்பாப்ள" என்று சொன்னார். வேறொரு பெண் பெட்ரோல் போட ஆயத்தமாகையில் "விடும்மா, நான் பாத்துக்கறேன்" என்று சொல்லிவிட்டு, "ஒரு நல்லது கெட்டதுனா ஃபோன் பன்றா" என்று சொல்லிவிட்டு தலையைக் குனிந்துகொண்டார்.  அவர் அப்படி நேரடியாகக் கேட்டதை நான் எதிர்பார்க்கவில்லை, "எப்படிணா இருக்கீங்க?". ஐம்பது வயது கடந்த தோற்றம், தலையில் முடிகள் அகன்று பரவலான வழுக்கை, அங்காங்கே நரைமுடிகள் படர்ந்திருந்தன, கண்களில் நிலையான ஒரு வருத்தம் ஒளிந்துகொண்டிருந்தது, ஒரு முறை என் முகத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் தலையைக் குனிந்துகொண்டார். நான் இதுபோன்ற தருணங்களில் சலனப்பட்டுவிடுவேன், எப்படி சூழலைக் கையாள்வது என்பது புரிவதில்லை. அவரிடம் "நான் அப்புறம் வந்து பாக்கறண்ணா" என்று சொல்லிவிட்டு காரைக் கிளப்பினேன். ஒருவகை

உயிர்மை இதழ், மதார் கவிதைகள் - ஒரு வாசிப்பு

Image
                                                       ' உயிர்மை ' இதழில் கவிஞர் மதாரின் ஆறு கவிதைகள் வெளிவந்துள்ளன. கவிதைகளை வாசித்துவிட்டு அதைத் தொகுத்துக்கொள்ள எழுதிய ஒரு சிறிய குறிப்பு, 1. பதினெட்டு கதவுகள் இதுபோன்ற கவிதைகளை வாசிக்க அதன் குறியீட்டு சாத்தியங்களைப் பற்றி ஒரு வாசகனாக சிறு தேடல் தேவைப்படுகிறது. பதினெட்டு கதவுகள் என்பதை வேறு மதநம்பிக்கைகள் கொண்டவர்களை ஏற்றுக்கொள்ளும் போக்கை வெளிப்படுத்த யூதர்கள் பயன்படுத்தும் ஒரு குறியீட்டுச் சொல் என்று கூகுள் சொல்கிறது. அதைத் தாண்டி திறந்த மனதோடு வாழ்வை அணுகும் ஒரு போக்கை இந்தக் கவிதை பேசுவதாக வாசிக்கிறேன். 2. ஞாபக மறதி ஒரு ஞாபக மறதி தத்துவார்த்தமாக முடிவடைகிறது இந்தக் கவிதையில். 3. இரண்டு இரகசியங்கள் இந்தக் கவிதை கொஞ்சம் பொருள் மயக்கம் தருகிறது, பூடகமாகவும் இருக்கிறது. இந்த இரகசியத்தைச் சொல்பவன் யார், அல்லது சொல்பது எது? ஒரு இரகசியம் எப்படி இரு இரகசியங்களாகிறது? தலைப்பில் ஒளிந்திருப்பது எதைக் குறிக்கிறது? எனக்கு பிடிபடவில்லை, மதாருடைய 'கிணறு' கவிதையைப் போல இருக்கிறது. உள்ளிருந்து கேட்கும் அந்த இன்னொருவன் வயிற்றில் உள்ள

சொல்வனம் இதழ், மதார் கவிதைகள் - ஒரு வாசிப்பு

Image
                                                            கவிஞர் மதாரின் ஆறு கவிதைகள் ' சொல்வனம் ' இதழில் வெளிவந்துள்ளன. அது குறித்த ஒரு சிறிய குறிப்பு, 1. பலூனுக்குள் ஒரு பலூன் தந்தையாகப்போகும் ஒருவன் முதன்முதலில் தன் குழந்தையின் இதயத் துடிப்பைக் காண்பது என்பது வாழ்வின் சிறந்த அனுபவங்களில் ஒன்று. அந்த அனுபவம் அதீத நாடகத்தன்மை இல்லாமல், உணர்ச்சிகரம் இல்லாமல் மதாருக்கே உரிய முறையில் விலகிய ஆனால் ஒரு வெள்ளந்தியான பார்வையில் வெளிப்படுகிறது. இந்தக் கவிதையில் மதார் என்ற முத்திரை ஒன்று உள்ளது. 2. முழுதாகக் கரைந்த ரப்பர் கவிதைக்கு வரையறைகளோ, அளவுகோள்களோ கிடையாது. அது சுதந்திரமான ஒரு மொழி வெளிப்பாடு என்பதற்கு மிகச் சிறந்த ஒரு எடுத்துக்காட்டு இந்தக் கவிதை. ஒரு அன்றாடக் காட்சி சற்று கூர்ந்துநோக்கினால் எத்தனை சாத்தியங்களை நமக்கு அளிக்கும் என்று இந்தக் கவிதை உணர்த்திவிடுகிறது. ஆனால் அது கவிஞர்களுக்கு மட்டுமே வாய்க்கும் ஒரு பார்வை. மரம் என்பது நிலையான ஒன்று என்ற கோணத்தில் தத்துவார்த்தமாகவும் இதை வாசிக்க சாத்தியம் உள்ளது. 3. ஒரு தீபம் இந்தக் கவிதையில் என்னை பாதித்த ஒன்று நான் இதுவரை எண்ணிப

நீலத்தழல் சிறுகதை, அரூ இதழ் - ஒரு வாசிப்பு

Image
                                                            நண்பர் ஜெகதீஷ் குமாருடைய ' நீலத்தழல் ' என்ற சிறுகதை அரூ இதழில் வெளியாகியுள்ளது ('நீலத்தழல்' அழகிய கவித்துவமான தலைப்பு). அரூ அறிவியல் புனைவுகளை வெளியிடும் ஒரு இதழ். அதில் ஒரு சிறுகதைப்போட்டியில் தேர்வாகி இந்தக் கதை வெளியிடப்பட்டுள்ளது. சிறுகதை குறித்த என்னுடைய பார்வையை ஒட்டியே இந்தப் பதிவு. 'bioluminescence' எனும் கடலில் நிகழும் ஒரு இயற்கை நிகழ்வான 'ஒளி உமிழ்வு' மற்றும் அதன் அழகை முன்வைத்து, பிரசாத் எனும் புலம்பெயர் ஆசிரியனின் உளச்சலனங்களைச் சிறுகதை காட்சிப்படுத்துகிறது. கதையினூடாக சில அடிப்படைகளை வாசகனாக விரித்துக்கொள்ள முடிந்தது. தீவொன்றில் வாழும் மக்களின் மனநிலைகள் நிலப்பரப்பில் வாழும் மக்களிலிருந்து விலகியிருக்கும். கடல் என்பது அங்கு புலம்பெயரும் ஒருவனுக்கு அச்சமூட்டக்கூடிய சலிப்பான ஒரு இயற்கைக் காட்சி (பிரசாத்) அல்லது கண்டுகளிக்கக்கூடிய ஒரு சாகசம் (வருண்). பிரசாத் கடலை மையநிலத்திலிருந்து தன்னை விலக்கி வைத்திருக்கும் ஒரு இடையூறாகக் கருதுகிறான். ஆனால் அங்கு வாழும் மக்கள் கடல் என்பதை வெறும் இயற

கரூர் டைரீஸ், கவிஞர் அபி, ஒரு சந்திப்பு - 5

Image
                                                                 கவிஞர் அபியிடம் 2022ம் ஆண்டு கரூர் பயணத்தில் அலைபேசியில் உரையாடினேன். மிக விரிவான உரையாடலாக அது அமைந்தது. இந்த ஆண்டு கரூர் பயணத்தில் அவரை சந்திக்கலாம் எனும் எண்ணம் மனதில் இருந்தது. நான்கு வாரங்கள் விரைவு ரயிலெனக் கடந்துவிட்ட நிலையில், அவரைச் சந்திக்காமல் அமெரிக்கா திரும்புவது மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும் என்று உணர்ந்தேன்.  மே மாதம் 1ம் தேதி மதியம் அவருக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு வேலைகளில் மூழ்கினேன். 2.30 மணிக்கு பதில் வந்தது, என்னுடைய எழுத்துக்களை வாசிப்பதாகவும், என்னைச் சந்திப்பதில் மகிழ்ச்சி என்றும் சொன்னார். கவிஞர் மதாரை அந்த வாரம் வெள்ளிக்கிழமை மதுரையில் சந்திப்பதாக இருந்தேன். சனிக்கிழமை சென்னை செல்லவிருந்தமையால் வியாழன் சந்திக்கலாமா என்று கேட்டேன், சரி என்று சொன்னார். மதார் முடிந்தால் வியாழன் அன்று உடன் வருவதாகச் சொன்னார், ஆனால் கடைசித் தருணத்தில் அவரால் மதுரை வர இயலவில்லை. அபி என்னுடைய இந்திய தொலைபேசி எண்ணிற்கு அழைத்து எங்கு வரவேண்டும் என்று சொன்னார், தன்னுடைய விலாசத்தைப் பகிர்ந்துகொண்டார். "ஒரே ஒரு

கரூர் டைரீஸ், கவிஞர் ஆனந்த்குமார், ஒரு சந்திப்பு - 4

Image
                                                  கவிஞர் ஆனந்த்குமாரை 2021ம் ஆண்டு விஷ்ணுபுரம் விருது விழாவில் சந்தித்தேன். ஒரு சிறு அறிமுக உரையாடல் என்ற அளவிலேயே அது அமைந்தது. அவருடைய முதல் தொகுப்பான 'டிப் டிப் டிப்' நூல் அங்கு வெளியிடப்பட்டது. அமெரிக்கா திரும்பி தொகுப்பை வாசித்துவிட்டு அதற்கு kavithaigal.in தளத்தில் ஒரு கட்டுரையும் எழுதியிருந்தேன் ( கவிதை விதைத்தல் ). சென்ற வருடம் விஷ்ணுபுரம் குமரகுருபன் விருது வென்றவர். அமெரிக்காவிலிருந்து தொலைபேசியில் ஒருமுறை உரையாடினேன். புகைப்படக்கலை நிபுணர், குறிப்பாக குழந்தைகளின் புகைப்படங்களில். கோவை வடவள்ளியில் புதிதாக ஒரு புகைப்பட நிலையத்தை தொடங்கியிருக்கிறார். அவருடைய அலுவலகத்தில் இருந்தவரை மதியம் ஒரு 12.30 அளவில் நானும் ஜி.எஸ்.எஸ்.வி. நவீனும் சென்று சந்தித்தோம். புதிய அலுவலகத்துக்கே உரிய வெகுளித்தனத்துடனும், தனக்கே உரிய அரிதாரங்களை இன்னும் பூசிக்கொள்ளக் காத்திருக்கும் முனைப்புடனும் நிலையம் இருந்தது. ஆனந்த்குமார் நிலையத்தைக் கட்டமைப்பதிலும், புதிய நிலையத்தை மக்களிடம் கொண்டுசெல்வதற்கான வழிகளைப் பற்றிய சிந்தனைகளிலும் இருந்தார். புகைப்