புதிய நகரம் - கவிதை

                                            

ஜூலை 15, 2025

நான் ஒரு அழகிய நகரில்

வாழ்கிறேன்

இங்கு மரங்கள்

நெருப்பை அணிகின்றன

ஆறு கடல் குளங்களில்

குருதி ஓடுகிறது

அணுக்கமானவர்களை

கட்டி அணைக்கையில்

கத்தியால்

மெல்ல கீறுகிறார்கள்

குழந்தைகள் 

தன்னைவிடப் பெரிய

நிஜத் துப்பாக்கிகளைக் கொண்டு

வானில்

சுட்டுப் பயில்கிறார்கள்

அன்பு கருணை கண்ணீர்

போன்ற வார்த்தைகள்

உச்சரிப்புத் தடைகொண்டன

எல்லோரும்

சங்கேத வார்த்தைகளில்

பாடினார்கள்

இறப்பு வீடுகளில்

மனிதர்கள் பால் கருதாமல்

புணர்ந்தார்கள்

நான் ஒரு கவிஞனின்

இறுதிச் சடங்கிற்கு

சென்றேன்

இனிய கவிதைகள் மட்டும்

எழுதியவன்

கழுவிலேற்றப்பட்டவன்

எதிலிருந்தோ விடுபட்ட

சாயலுடன்

உறைந்த அவன் முகத்தைப்

பார்த்து

சில கவிதை வரிகளை

முணுமுணுத்துவிட்டு...

பின்

என்னுடன் இணைய

அழைத்த

பெயர் தெரியாத மிருகம்

ஒன்றுடன்

இருளில் ஒதுங்கினேன்...

நான் வாழும்

நகரம்

அழகியது.

    - பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

மறைந்த நண்பனுக்கு - ஒரு கடிதம்

அமெரிக்கா, இரு வீடுகள்