Posts

Showing posts from November, 2025

மதார், இரு கவிதைகள் - பதில்கள்

Image
                                                                 ஓசை மட்டும் கேட்டால் அதிகாலைக் குயிலின் குரலை துடைப்பம் பெருக்குகிறது கடவுள் பாடலுடன் வந்து பால்பாக்கெட் வீசுகிறார் காகமும் வாசல் தெளிக்கிறது தூரத்து ஹாரன் ஒலி பறவையின் குரலாகிவிட்டது சமையலறையில் தாளிக்கும் சத்தம் வானத்திலிருந்து இறங்கி வந்ததுதான் குக்கரின் நான்காவது விசிலில் உலகத்தின் உணவு வேகிறது. சங்கர் நலமா? மதார் கவிதைகளை நீங்கள் தொடர்ந்து வாசிப்பது மகிழ்ச்சியளிக்கிறது, அவரிடமும் இதைப் பகிர்ந்துகொள்கிறேன். ‘ஓசை மட்டும் கேட்டால்’  அதி காலையில் உறக்கத்தில் இருக்கிறோம், விழிப்பு வந்தும் வராமலும் இருக்கும் நிலை. நம் பிரக்ஞை விழிப்பில் இருக்கிறது, அனால் கண்கள் மூடியிருக்கிறது. ஓசைகளை மட்டும் கேட்கிறோம் அல்லவா, அப்போது நாம் கேட்கும் ஓசைகள் ஒரு கவிஞனுக்கு எப்படிப் பொருள்படுகின்றன என்பதாக ஒரு கோணத்தை இந்தக் கவிதைக்கு அளிக்கலாம். ...

நாவல் பயிற்சி வகுப்பு - ஜெயமோகன்

Image
                                                                 நாவலை அறிதல் – பாலாஜி ராஜு | எழுத்தாளர் ஜெயமோகன் ஆசிரியருக்கு, அமெரிக்காவில் மற்றுமொரு அழகிய இலையுதிர் காலம் உங்கள் வருகையால் அர்த்தத்துடன் கடந்திருக்கிறது. தத்துவ வகுப்புகள் முடிந்து கொலம்பஸ் திரும்பிய இரண்டு நாட்களிலேயே நாவல் பயிற்சி வகுப்புக்காக மீண்டும் மலைகளினூடாக ஏழுமணிநேர சாலைப் பயணம். இடம் - ஹெர்ன்டன், விர்ஜீனியா மாகாணம்.  கற்றல் மட்டுமே வாழ்வை அர்த்தம் உள்ளதாக மாற்றும் என்று நீங்கள் பலமுறை எழுதியிருக்கிறீர்கள், பேசியிருக்கிறீர்கள். இதை தத்துவம், நாவல் வகுப்புகளில் கலந்துகொண்ட அனுபவங்களின் வாயிலாக தொகுத்துப் பார்க்கையில் இன்னும் ஆழமாக உணர்கிறேன். நாவல் பயிற்சி வகுப்பின் உச்ச அனுபவமாக என்னில் எஞ்சுவது, ‘The Master Christian’ நாவலின் தரிசனத்தை, தருணங்களை எங்கள் முன் பகிர்ந்த உங்களில் எழுந்த உணர்ச்சிகரமான உடல்மொழியும், மு...

அசுரகணம் குறுநாவல் - வாசிப்பு

Image
                                                                 ஜெயமோகனின் நாவல் பயிற்சி வகுப்பிற்காக நண்பர் நிர்மல் சில குறுநாவல்களை வாசிக்குமாறு பரிந்துரைத்தார். கா.நா.சு வின் 'அசுரகணம்' நாவலை வாசித்தேன். நூறு பக்கங்கள் இருக்கலாம், ஒவ்வொரு அத்தியாயமும் இருநூறு வார்த்தைகளுக்குள், இரண்டு பக்கங்கள் என்ற அளவில் திட்டமிட்டு பகுக்கப்பட்ட நாவல் அசுரகணம். ஜெயமோகன் ஒரு குறுநாவலின் முதல் அத்தியாயம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கவேண்டும் என்று பயிற்சி வகுப்பில் குறிப்பிட்டார். இந்த நாவலில் நாயகனுக்கு கேட்கும் நாதஸ்வர ஓசை தப்புச் சப்தம் போல ஒலித்து அவனுக்கு மரணத்தை நினைவூட்டுகிறது. நாவல் மிக சுவாரசியமாகவே தொடங்குகிறது. நினைவோடை உக்தி என்ற முறையில் கதை சொல்லியின் மனதில் தோன்றும் எண்ணங்களை அப்படியே வெளிப்படுத்துமாறு எழுதப்பட்ட நாவல். ராமன் கல்லூரி மாணவன், பிற மாணவர்களால் பிறழ்ந...

Sisu: Road to Revenge - உயிர்த்துடிப்பான படைப்பு

Image
                                                                 ஒன்றரை மணிநேர அதிரடித் திரைப்படங்கள் சரியான முறையில் எடுக்கப்பட்டால், பார்வையாளனை ஆட்கொண்டுவிடுகின்றன. 'Behind the Enemy Lines' என்ற திரைப்படத்தை திருச்சி மாரீஸ் திரையரங்கில் கல்லுரி நாட்களில் பார்த்த நினைவு இருக்கிறது. எதிரிகளின் எல்லைக்குள் மாட்டிக்கொண்ட அமெரிக்க இராணுவ வீரன் அங்கிருந்து பல தடைகளை மீறி மீள்வதே அந்தப் படத்தின் கதை. சென்ற வருடம் மீண்டும் பார்க்கையிலும் சுவாரசியம் குறையாமல் இருந்தது அந்தத் திரைப்படம். ஒன்றரை மணிநேரத்தில் பார்வையாளனைக் கவர்ந்துவிடவேண்டும் எனும் அசாத்திய சவால் இந்த வகைப் படங்களுக்கு உண்டு. Sisu: Road to Revenge இந்தச் சவாலை அநாயாசமாக ஏற்றுக்கொண்டு வெற்றிகரமாகக் கடக்கிறது. பழிவாங்குதல் எனும் என்றும் பார்த்துத் தீராத அம்சத்தை அடிப்படையாகக் கொண்ட இத்தகைய திரைப்படங்கள், சரியான புள்ளியில் பார்வையாளனைத் தூண...