Posts

Showing posts from November, 2023

மேசன்களின் உலகம் - கவிஞர் வேணு தயாநிதி

Image
                                                  கவிஞர் வேணு தயாநிதி 'காஸ்மிக் தூசி' என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறார். சொல்வனம் , அகழ் , பதாகை ,  kavithaigal.in போன்ற பல இணைய இதழ்களில் அவருடைய கவிதைகள் வெளிவந்துள்ளன. தன்னுடைய கவிதைகளைத் தொகுத்து அதன் வரைவை வாசிக்க அனுப்பியிருந்தார். அவருக்கு எழுதிய கடிதம் இங்கே, அன்புள்ள வேணு, தொகுப்பை இரண்டு முறை வாசித்தேன், பெரும்பாலான கவிதைகளை பலமுறை வாசித்துவிட்டேன். கவிதைகள் குறித்து தோன்றிய எண்ணங்களை இங்கு பகிர்கிறேன். கவிதைகளை தொகுப்பாக வாசிக்கையில் கவிஞனுடைய அக மற்றும் புறச்சூழல் குறித்த சித்திரம் வாசகனின் மனதில் உருவாகிவிடுகிறது; அது ஒருவகையில் இயல்பானது என்றே எண்ணுகிறேன். எனக்கும் உங்கள் தொகுப்பை வாசிக்கையில் வேணு தயாநிதி எனும் கவிஞனுடைய சூழல் குறித்த ஒரு பார்வை கிட்டியது; அல்லது அதை நான் என்னுடைய வாசிப்பில் உருவாக்கிக்கொண்டேன். முதலில் புறச்சூழலைப் பார்ப்போம் – இதையே இரண்டாகப் பிரித்துக்கொள்கிறேன் – மேப்பிள், பிர்ச், பைன், அணில், ஏகார்ன் பழம், வெண்பனி, பூங்கா, ஏரி, பறவைகள், அம்முக்குட்டி என தற்போதைய மினியாபொ

என் கவிதைகள் - அறை

Image
                                                       நவம்பர் 19, 2023 ரஸ்கோல்நிகோஃவின் அறையை வாடகைக்கு எடுத்தேன் சல்லிசான விலைக்கு கிடைத்தது பின்நவீனத்துவவாதியின் மாலைப்பொழுதை முன்பதிவு செய்தேன் நிபந்தனைகள் விதித்த கொசுறுகள் தாண்டி புன்னகையோடு அணைத்துக்கொண்டார் தொல்மரபாளனின் உறக்கமற்ற இரவை காத்திருந்து குழந்தையென பொத்திக்கொண்டேன் இரண்டு நதிகளுக்கிடையில் நீளும் சாலையில் என் பயணம் அசதியான பயணியின் வசீகரங்களை பூர்த்திசெய்ய எனக்களிக்கப்பட்ட மதுக்கோப்பையை முலைமறந்த குழந்தையின் நினைவென கவ்விக்கொள்கிறேன் முடிவுறா இந்த மாலையில்.   - பாலாஜி ராஜூ

என் கவிதைகள் - பிராணி

Image
                                                     நவம்பர் 18, 2023 அது என்னிடம்  எப்படி வந்தது என்று தெரியவில்லை நான் ஒரு டைனோசரை வளர்த்துக்கொண்டிருந்தேன் அது என்னை விழுங்கி வளர்ந்துகொண்டிருந்தது சலனமற்ற இரவில் அலறும் பெயரற்ற காட்டு விலங்கைப் போல எதிர்பாராத வேளைகளில் என் கட்டுகளை மீறி உறுமித் திமிறும் ஒரு நாள் பூங்காவில் விளையாடும் குழந்தையிடமிருந்து வெளியேறிய குட்டி டைனோசரைக் கண்ட அந்த தருணம் புரிந்துவிட்டது  எனக்கு எல்லாமும்.      - பாலாஜி ராஜூ

என் கவிதைகள் - காலணிகள்

Image
                                                  நவம்பர் 5, 2023 நம்மைத் தொலைக்க நெடும் பயணங்கள் தேவையில்லை வெற்றுக் கால்களில் சில மைல்கள் ஓடிக் கடக்கலாம் ஓடியும் கலைக்கலாம் நம் காலடிகளை அந்த ஊரிலிருந்து சில கடிதங்களை எழுதலாம் அவற்றை வாசிக்காமல் நெருப்பிலிட்டால் போதும் ஊதி விளையாடி சுழன்று திளைக்கலாம் நம் விலாசங்களின் ஞாபகப் பரப்பை காற்று மீட்டும் மின்சாரக் கம்பிகளில் நம் காலணிகள்.   - பாலாஜி ராஜூ