Posts

Showing posts from February, 2022

விக்ரமாதித்யன் கவிதைகள் – விஷ்ணுபுரம் விருது கடிதம்

Image
                                                              2021ம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்பட்டதை ஒட்டி எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எழுதிய கடிதம். இந்தக் கடிதம் அவருடைய தளத்தில் 'செருக்கும் கலைஞன்' என்ற தலைப்பில் வெளிவந்தது. பிறகு விருது விழாவில் வெளியிடப்பட்ட 'நாடோடியின் கால்த்தடம்' விமர்சன நூலிலும் இடம்பெற்றது. கடிதம் எழுதப்பட்ட நாள் அக்டோபர் 15, 2021. அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு , இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு அளிக்கப்படுவது மகிழ்வான செய்தி , தமிழின் தலைசிறந்த இன்னொரு கவிஞனைக் கொண்டாட ஒரு சந்தர்ப்பம் . விழா சிறப்பாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள் .   இது குறித்த பதிவுகளில் வெளிவரும் அவருடைய புகைப்படங்களையும் கூர்ந்து கவனிக்கிறேன் , புகைப்படக் கருவிகள் சில முகங்களிடம் மட்டும் அதீத வாஞ்சையுடன் இருந்துவிடுகின்றன . அவருடைய கவிதைத் தொகுப்புகள் கிண்டிலில் வாசிக் க கிடைத்தது . அவற்றில் சில கவிதைகளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன் , ' கறுத்த மேகங்கள் திரளும் வானம் இருளோ சமுத்ரமோ அந்திக்கருக்கலோ என்றாக

'நித்தியம்' சிறுகதை – ஜி.எஸ்.எஸ்.வி. நவீனுக்கு எழுதிய கடிதம்

Image
                                                                   'அகழ்' இதழில் வெளியான ' நித்தியம் ' சிறுகதை குறித்து எழுத்தாளர் ஜி.எஸ்.எஸ்.வி. நவீனுக்கு எழுதிய கடிதம்.  கடிதம் எழுதப்பட்ட நாள் ஜூலை 13, 2021. அன்புள்ள நவீன், வரலாற்றின் பிண்ணனியில் சதி எனும் உடன்கட்டை ஏறும் சடங்கை மையமாக வைத்து ஒரு கதையைச் சொல்லியிருக்கிறீர்கள் . உடன்கட்டை ஏறுதல் எனும் சடங்கு பற்றி பள்ளியில் பாடப்புத்தகங்களில் படித்த நினைவுகள் உண்டு . வரலாற்றில் புனிதப்படுத்தப்பட்ட , சர்ச்சைக்குரிய களத்தை அழகாக கதைப்படுத்தியதற்கு முதலில் பாராட்டுகள் . கடந்த காலம் ஒன்றில் நிகழும் கதைதான் என்றாலும் அடிப்படை மனித உணர்வுகள் என்றும் உள்ளவைதான் . அதிகாரத்தின் கரங்களில் என்றும் மறையாத இரத்தக்கரைகளுண்டு . தாம் நம்பும் மதத்தின் நம்பிக்கைகளை மூர்க்கமாகக் கடைப்பிடிக்கும் அரசன் மற்றும் அதன் மக்கள் , பெண்களை வெறும் எண்ணிக்கைகளாகப் பார்க்கும் அரசன் , புனிதச் சடங்கு என பயிற்றுவிக்கப்பட்டாலும் உயிரின் ஆதார விருப்பமான வாழ்தலை விட மனமில்லாமல் தவிக்கும

'வெயில் பறந்தது' கவிதைத் தொகுப்பு – மதாருக்கு எழுதிய கடிதம்

Image
                                                                                 கவிஞர் மதாருக்கு எழுதிய கடிதத்தின் சுருக்கப்பட்ட வடிவம் இது.  கடிதம் எழுதப்பட்ட நாள் நவம்பர் 17, 2021. அன்புள்ள மதார் , நலம் விழைகிறேன் . என் பெயர் பாலாஜி ராஜூ , உங்கள் கவிதைகளின் வாசகன் . முதலில் அற்புதமான இந்த த் தொகுப்புக்காக என் மனமார்ந்த வாழ்த்துகள் . கவிதைகளை மறு வாசிப்பு செய்யும் வழக்கமுள்ளவன் , மறு வாசிப்புகளில் மட்டுமே கவிதைகளை இன்னும் சற்று நெருக்கமாக உணர்கிறேன் , முதல் வாசிப்பில் விடுபட்டவற்றை அடையச் செய்யும் ஒரு முயற்சி என இதை எடுத்துக்கொள்ளலாம் . ' வெயில் பறந்தது ' தொகுப்பை மூன்று முறை வாசித்தேன் , இன்னும் சரியாகச் சொன்னால் இரண்டரை முறை . ஒரு வாசகனாக என்னை திரும்பத் திரும்ப வாசிக்க வைத்தன உங்கள் கவிதைகள் . உங்கள் கவிதைகள் குறித்த சில எண்ணங்களையும் பகிர்கிறேன் , இவை முழுமை பெறாத எண்ணங்களாக இருக்கலாம் , உங்கள் கவிதைகளின் நுட்பங்களையும் சிடுக்குகளையும் முழுவதுமாகப் புரிந்துகொண்டுவிட்டேன் எ ன்று சொல்ல மாட்டேன் . உங்கள் கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தன என்பதைப் புலப்படுத்த இதை விட சி