Posts

Last Post

நெடும்பாதைகள், மிக்ஷிகன் கதை விவாதம்

Image
                                                                 அன்புள்ள நண்பர்களுக்கு, என்னுடைய கதையை வாசிக்க நேரம் அளித்தமைக்கு முதல் நன்றி. விவாதம் குறித்த பதிவை மதுநிகா பகிர்ந்திருந்தார். அதில் எழுந்த சில கேள்விகள், கருத்துகள் குறித்த என்னுடைய எண்ணங்களைப் பகிர்கிறேன். கதையின் முதல் வரி கதையின் முதல் வரியை அனைவருமே கூர்ந்து வாசித்திருக்கிறீர்கள். நான் இந்தக் கதையை சில மாதங்களுக்கு முன்னரே தொடங்கி அப்படியே வைத்திருந்தேன், கதை என்னுள் எழ மறுத்தது.  அன்னம்மாள் அந்தக் கடிகார ஒலியை எதிர்கொள்ளும் தருணத்தில் இருந்தே கதையை நான் முதலில் தொடங்கியிருந்தேன். இந்தக் கதையில் காலம் ஒரு கதாப்பாத்திரம் போலவே ஊடாடுகிறது. மேலும் கடிகாரம் காலத்துக்கான குறியீடு என்பது இலக்கிய வாசகர்கள் அனைவருக்குமே பரிச்சயமான ஒன்று என்பதால் அது சரியான தொடக்கமாக இருக்கும் என்றும் எண்ணினேன். ஆனால், அது மிகவும் சம்பிரதாயமான ஒர...

நெடும்பாதைகள், சிறுகதை - ஆவநாழி இதழ்

Image
                                                            சமையல்கட்டு காரைச் சுவரின் பிளவினுள் வெள்ளந்தியாக நுழைந்த புழக்கடை மருதாணிச் செடியின் கிளை அன்னம்மாளிடம் எதையோ சொல்வது போல அசைந்துகொடுத்தது . இரவுப் பூச்சிகள் சூரியனுக்கு வழியனுப்பச் சப்தமிட்டன . சமையல்கட்டை ஒட்டிய திறந்த முற்றத்தில் , மச்சின் சிதைந்த கைப்பிடிச் சுவர் தன் கம்பிக்கூட்டு உடலைத் தரையில் நிழலாகப் பதித்தது . கட்டுச் சோற்றுக்காக உலையில் கொதித்துக்கொண்டிருந்த அரிசியைக் கரண்டியில் எடுத்து அழுத்திப் பார்த்து , இறுகிய பதம் இருக்கையிலேயே கஞ்சியை வடித்தாள் . பொம்னாபாடியாருக்காக கஞ்சியில் உப்பு சேர்க்காமல் பூண்டு , சீரகம் , வெந்தயம் இட்டு மென்சூட்டில் கொதிக்கவைத்தாள் .   முன்பெல்லாம் சமையல்கட்டுச் சுவரின் விரிசல்களை களிமண்ணும் சுண்ணமும் வைத்து அடைப்பதும் , அதை மீறிப் புகுந்து தலைகாட...