Posts

Last Post

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

Image
                                                            ஆசிரியருக்கு, 2021ம் ஆண்டிலிருந்து விஷ்ணுபுரம் விருது விழா, குரு நித்யா காவிய முகாம், பூன் இலக்கிய முகாம் என தொடர்ச்சியாக வருடம் ஒருமுறையேனும் ஒரு பெரிய நிகழ்வின் பகுதியாக உங்களை சந்தித்துக்கொண்டிருக்கிறேன். இந்த வருட பூன் முகாமில் கலந்துகொள்ள இயலாத நிலை. அமெரிக்க வாழ்வுக்கே உரிய சில நடைமுறை காரணங்கள். மிக்ஷிகன் மாகாணம் உங்கள் பயணத் திட்டங்களில் இருந்தது ஒரு பெரும் ஆசுவாசத்தை அளித்தது. நண்பர்கள் சங்கர் நாராயணனிடமும் மதுநிகாவிடமும் பேசி ட்ராய் நகரில் நீங்கள் பங்கேற்கும் கூடுகைக்கு முன்பதிவுசெய்துகொண்டேன், கொலம்பஸ் நகரிலிருந்து வடதிசையில் மூன்றரை மணிநேர பயணம். நிகழ்வுக்கு ஒருமணிநேரம் முன்னரே அரங்கிற்கு சென்றுவிட்டேன் (Troy Community Center). சங்கர் நாராயணன் மெல்லிய பதற்றத்துடன் அலைந்துகொண்டிருந்தார். மிக்ஷிகன் நகரில் நீங்கள் ஆற்றும் முதல் உரை என்பதால் அதை சலனங்கள் இல்லாமல் நிகழ்த்தவேண்டிய கடமை அவருக்கு. உங்கள் கூட்டங்களில் தவறாமல் கடைப்பிடிக்கப்படும் சில நிபந்தனைகளை அறிவித்தனர். விஷ்ணுபுரம் குழுவுக்கு வெளியே பொதுவான இலக்கிய ஆர்வ

Deadpool & Wolverine - ஒரு Deadpool ரசிகனின் புலம்பல்

Image
                                                            இயக்குனர் மார்டின் ஸ்கார்செஸி (Martin Scorsese) மார்வெல் திரைப்படங்கள் பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்றவை (Amusement Park Films) என சொல்லியிருந்தார். அழமான உணர்வுகளோ கதைக்களங்களோ அற்ற திரைப்பட உருவாக்கத்தை மட்டுமே சார்ந்திருக்கும் மலிவான ஆக்கங்கள் என்பதே அவருடைய பார்வை. மார்வெலின் சில திரைப்படங்களைக் காண முயன்று ஆழ்ந்து செல்ல இயலாமல் வெளிவந்திருக்கிறார். மார்வெல் திரைப்படங்கள் குறித்த என்னுடைய அனுபவமும் பார்வையும் அதுவே. என்னுடைய வாசிப்பை நான் காமிக்ஸ் புத்தங்களில் இருந்தே தொடங்கினேன். பெரும்பாலும் வன்மேற்கு நிலத்தைச் சார்ந்த கதைக்களம் அமைந்தவற்றையே அதிகமும் வாசித்தேன். சூப்பர் ஹீரோ பாத்திரங்களில் முகமூடி வீரார் மாயாவியையும் வாசித்திருக்கிறேன். இந்த புத்தகங்களில் கூட அடிப்படையான கதைக்களமும் இயல்பான மனித உணர்வுகளும் அமைந்திருக்கும். சூப்பர் ஹீரோ பாத்திரங்களில் டெட்பூல் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. வயது முதிர்ந்தோருக்கான 'R' தரவரிசையைச் சார்ந்தவை டெல்பூல் படங்கள். மக்கள் முன் தன்னை ஒரு முன்மாதிரியாக நிறுவிக்கொள்ள முயலாத, அ

'சங்கிலிப் பூதத்தான்' சிறுகதைத் தொகுப்பு, நாஞ்சில் நாடன்

Image
                                                            நாஞ்சில் நாடனின் நாவல்களில் தலைகீழ் விகிதங்கள், சதுரங்கக் குதிரை, மிதவை, கட்டுரைத் தொகுப்புகளில் தீதும் நன்றும், எப்படிப் பாடுவேனோ, சிறுகதைத் தொகுப்புகளில் சூடிய பூ சூடற்க, கொங்குதேர் வாழ்க்கை ஆகியவற்றை வாசித்திருக்கிறேன். அவருடைய நாவல்கள் யதார்த்தவாத இலக்கிய வகைமையைச் சார்ந்தவை. குறிப்பாக மிதவை, சதுரங்கக் குதிரை நாவல்கள் என் மனதுக்கு மிக நெருக்கமானவை. பிழைப்பிற்காக மும்பை சென்று வாழும் ஒரு நடுத்தர வர்க்க இளைஞனின் வாழ்வை அந்த சூழலின் பிண்ணனியில் உயிர்ப்போடு எழுதியிருப்பார். சங்கிலிப் பூதத்தான் தொகுப்பிலிருக்கும் பதினேழு சிறுகதைகளும் ஆனந்த விகடன் இதழில் வெளியானவை. இவற்றின் பெரும்பாலான கதைகளை மற்ற தொகுப்புகளிலும் விகடனிலும் முன்னரே வாசித்திருந்தேன். சிறுகதைகளை சில ஆண்டுகள் இடைவெளியில் மறு வாசிப்பு செய்கையில் முந்தைய வாசிப்பில் அடையாதவை இன்னும் துலக்கமாகின்றன. இலக்கிய வாசகனாக சில ஆண்டுகள் நாமும் பயணித்திருப்போம் என்பதால் ஒரு ஆசிரியனின் படைப்புலகு குறித்த நம்முடைய அவதானிப்புகளும் மாற வாய்ப்புகளுண்டு. சில ஆசிரியர்கள் நெருக்கமாகின்ற

On the Move: A Life - Oliver Sacks

Image
                                                            சுய வரலாற்று புத்தகங்களை ஏன் வாசிக்கிறோம்? நவீன வாழ்வின் மனிதர்களுக்கு ஆர்ப்பாட்டமற்ற மாறாச் சுழல் போன்ற வாழ்வு அமைந்துள்ளது. அத்தகைய வாழ்வின் மிகவும் கணிக்கக்கூடிய நகர்வு விருப்பத்துக்குரியதாக இருந்தாலும் நாளடைவில் சிறிய சலிப்பு உருவாகிவிடுகிறது. இதில் சிலர் பயணம், கலை என புதிய பாதைகளில் பயணித்தாலும் பெரும்பாலானவர்களுக்கு அது சாத்தியமாவதில்லை. மன அமைப்பு குடும்ப சூழல் என பல காரணிகள் இருக்கலாம். ஒரு புத்தக வாசகனும் மேற்குறிப்பிட்ட நவீன வாழ்வின் கட்டுக்களில் அகப்பட்டவனாகவே இருக்கிறான். சுய வரலாற்று நூல்கள் அத்தகைய கட்டுக்களில் இருந்து வெளியேற வாழ்வை மாற்றுக்கோணத்தில் அணுக பல பாதைகளை அளிக்கின்றன. சரி, யாருடைய சுய வரலாற்று அனுபவங்களை வாசிக்க விரும்புகிறோம்? நம் அன்றாட வாழ்விலிருந்து முற்றிலும் விலகிய புதிய பாதைகளில் பயணிக்கும், பித்தும் அதி உத்வேகமும் அமைந்த மனிதர்களின் வாழ்வையே புத்தங்களின் வாயிலாக அறிந்துகொள்ள எண்ணுகிறோம்.  ஆலிவர் சாக்ஸ் எத்தகையவர்? நரம்பியல் நிபுணர், யூதர், எடைதூக்கும் வீரர், ஓரினச் சேர்க்கையாளர், அமெரிக்காவுக

ஐன்ஸ்டீனின் கனவுகள், நாவல் - ஒரு பார்வை

Image
                                                            காலத்திற்கும் நமக்குமான பிணைப்பு என்ன? காலத்தை நாம் என்னவாகப் புரிந்துகொண்டிருக்கிறோம்? ஒரு உருவகமாகவா? காலமும் இடமும் இணைந்த ஒன்று என விளக்கும் சார்பியல் கொள்கை வாயிலாகவா?  காலம் நம்முடைய பிரக்ஞையில் ஆழமாகப் பிணைந்துவிட்ட ஒன்று. நம்முடைய ஆழமனதில் அருவமாக அமைந்துவிட்ட ஒன்று என்பதால் அதை தர்க்கப்படுத்திப் புரிந்துகொள்வது நம்முடைய அறிதல்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகவே விளங்குகிறது. காலத்தை அறிவியலின் சமன்பாடுகள் மூலமாக அறிந்துகொள்ளலாம். ஒரு ஆறிதல் எனும் வகையில் அறிவியல் வாயிலாக புரிந்துகொள்வது நமக்கு நிறைவளிக்கலாம். ஆனால் அதன் அருவத்தன்மையால் நமக்குள் உள்ள ஆழமான கேள்விகளுக்கு பதில் தேட தத்துவத்தையும் குறிப்பாக மீபொருண்மைத் தளத்தையுமே நாம் இயல்பாக நாடுகிறோம். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சுவிட்சர்லாந்து நாட்டின் பெர்ன் நகரில் ஒரு காப்புரிமை குமாஸ்தாவக வேலைசெய்கிறார். அங்கு அவர் சார்பியல் கொள்கையை நிறுவ முயன்றுகொண்டிருக்கிறார். ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதத்திற்குள் காலம் குறித்த அவருடைய முப்பது கனவுகளை 'ஐன்ஸ்டீனின் கனவுகள்' நாவல் விவ

ஏசுவின் காதலி - சிறுகதை

Image
                                                            கொலம்பஸ் நகரில் மெக்ஸிகோ தேசத்தவர்களை எங்கும் காணலாம். பூங்காக்களிலும் சாலையோரங்களிலும் புல் வெட்டுபவர்களாக, அவர்களுக்கே உரிய சிறிய தெருக்களில் அமைந்த வீடுகளிலும் தெருக்களின் ஓரத்திலும் கால்பந்தாடுபவர்களாக, டெக்கரியா என்று அழைக்கப்படும் மெக்ஸிகோ தேசத்தின் பிரத்யேக உணவகங்களில் உண்பவர்களாக பரிமாறுபவர்களாக, தூசு பொதிந்த பழைய ட்ரக்குகளில் சாலைகளைக் கடப்பவர்களாக அவர்கள் தென்படுவார்கள். இந்தக் கதையின் மையமாக மெக்ஸிகோ தேசத்தின் அழகி ஒருவள் இருக்கிறாள். கோடைக்கால ஜூலை மாதத்தின் வெப்ப அலை பரவிய மாலையில் அவள் எங்கள் குடியிருப்பின் இரண்டடுக்கு வீடுகளில் பக்கவாட்டு கட்டிடத்தில் அண்டைவீட்டுக்காரியாக வந்து சேர்ந்தாள். டெக்ஸாஸ் என்ற பெயர் தாங்கிய மினி வேனில் தம் பெற்றோருடனும் ஒல்லியான தம்பியுடனும் வந்து இறங்கினாள். அவளுக்கு இருபதிலிருந்து இருபத்தைந்து வயதிருக்கலாம். பொதுவாக பிற நாட்டைச் சார்ந்த மனிதர்களின் வயதைக் கணிப்பதில் எல்லோருக்கும் ஒரு சிறிய தடுமாற்றம் இருக்கவே செய்கிறது, அதன் பொருட்டே இருபதிலிருந்து இருபத்தைந்து வயது என்று எண்ணுகிறேன்

சுந்தர ராமசாமி நினைவின் நதியில் - மறுவாசிப்பு

Image
                                                         ‘ மரணத்தை எந்தவிதமான தத்துவ உதவியுமில்லாமல் எதிர்கொள்ளும் மனிதன் எத்தனை பரிதாபகரமானவன் ’. சுந்தர ராமசாமியை தன்னுடைய ஆசிரியராக ஆத்மார்த்தமாக உணரும், அவருடைய இறுதிக்காலத்தைப் பற்றி மிகுந்த அக்கரையோடு விசனப்படும் ஜெயமோகனின் மனதில் ஊறிய சொற்கள் இவை. சுந்தர ராமசாமியும் ஜெயமோகனும் மாலைநடை செல்கிறார்கள். விழுது பரப்பி நிற்கும் ஒரு ஆலமரத்தின் அடியில் திகைத்து நிற்கும் சுந்தர ராமசாமி முடிவின்மை குறித்து ஜெயமோகனிடம் மனம் பொங்கிப் பேசுகிறார், ‘பூமி முழுக்க நிறைஞ்சிருக்கிற உயிர் எவ்ளவு பயங்கரமா இருக்கு? மூர்க்கம்’. ‘சிருஷ்டி கொந்தளிச்சுண்டு இருக்கு’. தன்னுடைய இறப்பு அந்த ஆலமரத்தின் அடியில் நிகழவிருப்பதாக எண்ணியதையும் ஆலமரத்திடம உயிர்பிச்சை கேட்டதாகவும் அதிர்வுடன் சொல்கிறார் சுந்தர ராமசாமி. இந்த நூலின் கவித்துவம் மிக்க உச்ச தருணங்களில் ஒன்று இது. சுந்தர ராமசாமிக்கும் ஜெயமோகனுக்குமான ஆசிரிய மாணவ உறவு தமிழ் இலக்கியம் வாழும் வரை நினைவுகூரப்படும் ஒன்று. இரண்டு அறிவுஜீவிகள்; ஒருவர் தன்னுடைய வாழ்வின் சிந்தனைத் திறனின் உச்சத்தில் இருக்கிறார். ஒருவர்