இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது எப்படி? - ஒரு கையேடு கவிதை - தொடர்ச்சி
அகழ் இதழில் கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் எழுதிய ' இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது எப்படி? - ஒரு கையேடு ' என்ற கவிதையின் தொடர்ச்சியாக எழுதியது, இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது குணா திரைப்படத்தை வெறுப்பது, இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது தனிமை தகிக்கும் தொலைதூர மாலையில் அருவருப்பான தேனீர் எனும் பான(க)த்தைக் குடித்து குமட்டுவது, இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது பகல்நேர பேருந்து பயணங்கள் தீராமல் நீள்வதை மருட்சியோடு பார்ப்பது, இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது திருவிழாக்களை கதவு சன்னல்களை மூடி புதுமையாகக் கொண்டாடுவது, இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது வாழ்வின் பரிசான எதிர்பாராத் தருணங்களின் அழுகையை மௌனமாக நிகழ்த்துவது, இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது மன அழுத்த மாத்திரைகளுக்கு அலமாராவில் தாராள இடமளிப்பது, இளையராஜாவிடமிருந்து தப்பிப்பது காதுகளில...