Posts

Showing posts from February, 2025

'Room in New York' ஓவியம் - அகழ் இதழ்

Image
                                                               ஆசிரியர் ஜெயமோகன் புனைவு எழுதுபவர்கள் அகத்தூண்டுதலுக்கு காணொளிக் காட்சிகளைத் தவிர்த்து ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என்று ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார். அகழ் இதழின் கட்டுரைகளை விரும்பிப் படிக்கிறேன். இந்த கட்டுரையில் எட்வர்ட் ஹாப்பர் என்ற ஓவியரின் ‘ Room in New York ’ ஓவியம் சார்ந்த குறிப்புகள் வருகிறது. இதில் நியூயார்க் நகருக்கே உரிய சிறிய அறை ஒன்று உள்ளது. அறையின் அளவுக்கேயான பெரிய சாளரத்தின் பின்ணணியில் ஒரு இணை தெரிகிறார்கள். மஞ்சள் நிற சுவர்களில் சில ஓவியச் சட்டகங்கள் மாட்டப்பட்டுள்ளன. அந்த ஆணின் உடை அவனை நடுத்தரவர்க்க அல்லது கணவான் என்று சொல்கிறது. எதிரில் இருக்கும் தன் துணையை தவிர்த்து நாளிதழில் மூழ்கியிருக்கிறான். இந்த ஓவியத்தில் குறிப்பிடத்தக்க காட்சியாக தெரிவது அந்த பெண்ணின் உடல்மொழி. எதிரில் இருப்பவன் தன்னில் மூழ்கியிருக்கையி...

'மயிர்' இதழ் - அஜிதன் சிறுகதை

Image
                                                              'மயிர்' இணைய இதழில் அஜிதன் எழுதிய ' ஓர் இந்திய ஆன்மீக அனுபவம் ' எனும் தலைப்பில் எழுதிய சிறுகதையை ஒட்டி ஜெயமோகனுக்கு எழுதிய கடிதம், ஆசிரியருக்கு, ‘மயிர்’ இதழில் அஜிதனின் ‘ஓர் இந்திய ஆன்மீக அனுபவம்’ கதையை வாசித்தேன். மலம் குறித்த வர்ணனைகள் ‘விஷ்ணுபுரம்’ நாவலில் உள்ளது. ‘புறப்பாடு’ நூலின் ஒரு அத்தியாயத்தில் மும்பையின் சேரியில் உள்ள வீட்டின் சுவரில் மஞ்சளாக மலம் வழிந்து இறங்கிக்கொண்டிருக்கும், அருகில் தேவியின் படம் ஒன்றும் மாட்டப்பட்டிருக்கும். இன்னொரு அத்தியாயத்தில் வீட்டின் வயதான பெண் ஒருவர் ஆன்மீகம் குறித்து பேசுபவனின் ‘இலையில் கொஞ்சம் அள்ளி வைடா திங்கட்டும்’ என்று சொல்லும் தருணமும் நினைவுக்கு வருகிறது. ’ஏழாம் உலகம்’ நாவல் தொடும் உச்சத்தையும் எண்ணிப் பார்க்கலாம். இந்த கதையின் கதைசொல்லி அவன் செல்லும் இடத்தை அறிந்துவைத்திருக்கிறான். எல்லோரும் செல்...

'மாற்றுச் சொற்கள்' கட்டுரை - மதார்

Image
                                                                 'Kavithaigal.in' இதழில் கவிஞர் மதார் ' மாற்றுச் சொற்கள் ' எனும் தலைப்பில் இரு கட்டுரைகள் எழுதியிருக்கிறார். கட்டுரை குறித்தும் அதில் உள்ள கவிதைகள் குறித்தும் அவருக்கு எழுதிய கடிதம், அன்புள்ள மதார், ‘மாற்றுச் சொற்கள்’ கட்டுரையில் இருந்த மலையாள மொழிபெயர்ப்புக் கவிதைகளை மறுபடியும் வாசித்தேன். ‘அம்மு தீபா’ வுடைய இந்த கவிதை மிகவும் பிடித்திருந்தது. ‘ மிளாவின் கொம்பிலேறி நிலாவொன்று மலையை கடப்பதைக் கண்டாள்’ என்று முடியும் கவிதையின் வரிகளை, ‘மிளாவின் கொம்பிலேறி மலையை கடக்கும் நிலா ’ என்று வாசித்தால் அப்படியே ஹைக்கூ கவிதையை நெருங்குகிறது. உங்களுடைய ‘வெயில் பறந்தது’ தொகுப்பில் உள்ள ‘நிலவொளியில் திருடன்’ கவிதை உடனே நினைவுக்கு வந்தது. கவிதைகளில் சொற்களை மீறி நிற்கும் காட்சிகள் இத்தனை வசீகரமாய் இருப்பது ஆச்சரியமளிக்கிறது. ஒரு நல்ல கவிதை சிந்தனை...