Posts

Showing posts from September, 2023

கி. ராஜநாராயணன் இசையினூடாக - ஒரு குரல் முயற்சி

Image
                                               ஒவ்வொரு முறை என்னுடைய குரலைக் கேட்கும் போதும் சிறு திகைப்பு ஏற்படும். எனக்கு தொடர்பே இல்லாத ஒரு அந்நியனின் குரல் போல அது ஒலிக்கும், ஒருவகை முரட்டுக் குரல். செப்டம்பர் 5, மாலை ஆறுமணி அளவில் இசையமைப்பாளரும் அமெரிக்க விஷ்ணுபுரம் குழுவின் உறுபினருமான ராஜன் சோமசுந்தரம் 'நேரமிருக்கையில் அழைக்கவும்' என ஒரு குறுந்தகவல் அனுப்பியிருந்தார். அவரிடம் சென்ற ஆண்டு பூன் காவிய முகாமில் சந்தித்து உரையாடியிருக்கிறேன். ராஜன் என்னுடைய குரல் மிக வலுவான ஒன்று என ஒரு உரையாடலில் சொல்லியிருந்தார் (Strong Base Voice).  பத்து நிமிடங்களில் அவரை அழைத்தேன், "உங்கள் குரலுக்கு ஒரு வேலை வந்திருக்கிறது" என்றார். 'என்னுடைய குரலுக்கு ஒரு வேலையா!' என்று சற்று துணுக்குற்று அவர் மேலும் பேசக் காத்திருந்தேன். எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, அவரை சிறப்பிக்க, 'கோபல்ல கிராமம்' நாவலில் இருந்து ஒரு கும்மிப்பாட்டை எடுத்து இசையமைத்து வெளியிடும் முயற்சியில் இருப்பதாகவும், அதற்கு ஒரு முன்னோட்ட காணொளி தயாரிப்பதாகவும்

ஆந்மாநாம் என்றொரு கவிஞன் - கவிதைகள் இதழ்

Image
                                                         செப்டம்பர் மாத கவிதைகள் இதழில் கவிஞர் ஆத்மாநாம் கவிதைகள் குறித்த எனது கட்டுரை வெளிவந்துள்ளது, அதன் பிரதி கீழே -  ஆத்மாநாம் என்றொரு கவிஞன் – கவிஞர் ஆத்மாநாம் குறுகிய காலத்தில் தமிழ் நவீனக் கவிதைகளின் மீது ஆழமான தாக்கத்தைச் செலுத்தியவர். ஆத்மாநாம் மறைந்து நாற்பதாண்டுகளாகியும் அவருடைய கவிதைகள் இன்றைய நவீனக் கவிஞர்களின் மேல் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதப்படுகிறது, விவாதிக்கப்படுகிறது. இளங்கோ கிருஷ்ணன், பெருந்தேவி இருவரும் ஆத்மாநாமை தம் கவிதைகளில் நேரடியாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள், இன்னும் பல கவிஞர்களும் இந்த வரிசையில் இருக்கலாம். ஆத்மாநாம் ஒரு நகரவாசி. சென்னை போன்ற ஒரு நகரம் அவர்மீது செலுத்திய ஆழ்ந்த தாக்கத்தையும், ஒரு பெருநகரச் சூழலின் மீதான அவருடைய எதிர்வினைகளையும் கவிதைகளாக்கியிருக்கிறார். ஒரு புரிதலுக்காக அவருடைய கவிதைகளை ஓவியம் இசை இலக்கியம் ஆகிய நுண்ணிய கலைகளில் பரிச்சயம் கொண்ட, மெல்லுணர்வும் கூர்மையும் அமைந்த ஒரு நகரத்து மனிதனின் அகச்சித்திரங்கள் என்று வகைப்படுத்தலாம். ஆத்மாநாம் சமூக அவலங்களை நோக்கி